பிரபாகரனால் வடமராட்சி கிழக்கில் விட்டுச் செல்லப்பட்ட பொக்கிசங்கள் அழிக்கப்பட்டது.
கடந்த 30 வருடகால யுத்தத்தில் வடகிழக்கு ஆபாய பூமியாக மாறியது. இராணுவத்தை நேர் நின்று எதிர்கொள்ள முடியாத பிரபாகரன் படை மிதிவெடிகளை விதைத்திருந்தது யாவரும் அறிந்த விடயம். இவ்வாறு புலிகளால் விதைக்கப்பட்ட வெடிபொருட்கள் இன்றுவரை மீட்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது.
அந்தவரிசையில் வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் மற்றும் அமுக்க குண்டுகள் நேற்று(22) செயலிழக்கம் செய்யப்பட்டன.
தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(20)அன்று நீர் பெறுவதற்க்கு பெக்கோ கனரக இயந்திரம் மூலம் கிணறு வெட்டியபோது இனங்காணப்பட்ட மேற்படி மோட்டார் குண்டுகளில் 81மிமி மோட்டார் குண்டுகள் 47 ம் 13.5 கிலோ கிராமுடை 3 அமுக்க வெடிகளும் சிறப்பு அதிரடி படையினரால் மீட்கப்பட்டிருந்தன்.
பின்னர் மீட்கப்பட்ட இக் குண்டுகள் பல வருடங்கள் பழமை வாய்ந்ததாக காணப்பட்டதுடன் அம்பன் கிழக்கு கொட்டோடை கடற்கரையில் வைத்து அழிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment