Tuesday, January 1, 2019

பாராளுமன்றத்தில் உள்ள பெரும்பாலானவர்கள், இதைத்தான் ஆசைப்படுகிறார்கள் - கெஹலிய ரம்புக்வெல்ல.

ஐக்கிய தேசிய கட்சியை அங்கத்துவப்படுத்தும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சுப் பதவி குறித்து பகிரங்கமாக பேசி வருகின்றனர். ஆனால், மக்களின் பணத்தை சூறையாடவும், அதிகார பலத்திற்குமே ஐக்கிய தேசிய கட்சியினர் ஆசைப்படுவதாக, கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல குற்றம் சுமத்தியுள்ளார்.

அண்மையில் புதிதாக அமைச்சரவை நியமிக்கப்பட்டது.எனினும் இந்த நியமனத்தில் ஐக்கிய தேசிய கட்சிக்குள்ளேயே பல முரண்பாடுகள் இருப்பதாக அவர் கூறினார். ஜனநாயகம் குறித்து பகிரங்க கருத்து வெளியிடும் ஐக்கிய தேசிய கட்சி, 50 கோடிக்கும், அமைச்சு பதவிக்கும் ஆசைப்படுகிறது. மாறாக மக்களை பற்றியோ, நாட்டை பற்றியோ ஐக்கிய தேசிய கட்சிக்கு எந்த கவலையும் இல்லையென கெஹலிய ரம்புக்வெல்ல கூறியுள்ளார்.

தமக்கு அமைச்சு பதவி கிடைத்தவுடன், எப்படியாவது மோசடி செய்து பணத்தை சூறையாட வேண்டும் என்பதே ஐக்கிய தேசிய கட்சியின் ஆசை என அவர் கூறினார். அத்துடன் ஐக்கிய தேசிய கட்சி குறித்து மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளதாக தெரிவித்த கெஹலிய ரம்புக்வெல்ல, அடுத்து வரும் தேர்தலில் மக்கள் பலம் எமக்கே கிடைக்கும் எனவும் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com