Tuesday, January 1, 2019

ஜனவரி 11 வரை தடை.

மாவனெல்ல பகுதியில், கடந்த தினம் புத்தர் சிலைகள் சில உடைக்கப்பட்டமை தொடர்பில் பரவலாக பேசப்பட்டு வருவதுடன், அந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில், சிலை உடைப்பு சம்பவத்திற்கு எதிராக பௌத்த பிக்குகள் சிலர் முன்னெடுக்கவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடையை
விதித்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தால் பௌத்தர்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் இடையில் இன முரண்பாடுகள் ஏற்படும் சாத்தியம் உருவாக்கலாம் என்பதாலேயே, இந்த தடை உத்தரவு பிற்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 1979 / 15 ஆம் இலக்க குற்றவியல் அமுலாக்கல் சட்டத்தின் கீழ், மேற்படி திட்டமிடப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தை, இந்த மாதம் 11 திகதி நடத்துவகற்கு நீதிமன்றத்தால், குறித்த பிக்குமார்க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com