Tuesday, January 1, 2019

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சேர தயாரில்லை, மரிக்கார் விளக்கம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிபந்தனைகளுடன் இணங்கி ஒருபோதும் ஆட்சியை அமைக்க மாட்டோம் என, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் கூறியுள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு , கருத்து வெளியிட்ட போதே மரிக்கார் இவ்வாறு கூறினார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிபந்தைகள் ஐக்கிய தேசிய கட்சியால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும் அவர் கூறினார்.

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு வரை தமது கட்சியால் ஆட்சியை தொடர முடியுமென கூறிய அவர், ஐக்கிய தேசிய கட்சியால் எந்த நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்ள முடியும் எனவும் கூறினார்.

தேர்தல் காலம் வந்தால் சுதந்திர கட்சியிலிருந்து குழுவொன்றை இணைத்துக்கொண்டு தேர்தலை சந்திப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி தயாராகவுள்ளதாகவும் மரிக்கார் கூறினார். அத்துடன் நாட்டின் அரசிய குழப்பங்களுக்கு நீதிமன்றம் ஊடாக சரியான ஜனநாயக தீர்வொன்று கிடைத்தமை பெரும் மகிழ்ச்சியை தருவதாக மரிக்கார் கூறினார்.

மக்கள் ஐக்கிய தேசிய கட்சியின் பக்கமே ஆதரவளிக்க உள்ளதாக கூறிய அவர், அடுத்து வரும் அத்தனை தேர்தல்களை சந்திக்க காத்திருப்பதாக கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com