Tuesday, January 1, 2019

பிரத்தியேக வகுப்புக்கள் குறித்து அமைச்சரவை பத்திரம்.

ஞாயிற்றுக்கிழமைகளிலும், பூரணை தினங்களிலும் மாணவர்களுக்காக பல பிரத்தியேக வகுப்புக்கள் நடாத்தப்பட்டு வருகின்றன. இந்த நாட்களில் மாணவர்களுக்கான இந்த பிரத்தியேக வகுப்புக்களை நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக புத்த சாசன, மற்றும் வாடா மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா கூறியுள்ளார்.

மாணவர்கள், தமதுஓய்வு மற்றும் சுயகல்வியை விடுமுறை தினங்களிலேயே நடத்த முடியும். இந்த நாட்களில் அவர்களை பிரத்தியேக வகுப்புக்களுக்கு அழைப்பதை தவிர்க்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். அத்துடன் தம்ம பாடசாலை கல்வியை ஞாயிற்றுக்கிழமைகளிலேயே நடாத்த முடியும். இந்த நாட்களில் அவர்கள் பிரத்தியேக வகுப்புக்களுக்கு அழைக்கப்படுவதால், தம்ம பாடசாலைக்கு செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இந்த நிலை பௌத்த மாணவர்களுக்கு மட்டுமன்றி, இந்து,கத்தோலிக்க முஸ்லிம் மாணவர்களுக்கும் இருப்பதால், தாம் இது குறித்து கவனம் செலுத்தவுள்ளதாக அமைச்சர் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை மற்றும் பூரணை தினங்களில் பிரத்தியேக வகுப்புக்களை நிறுத்துவதற்கான, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் கையொப்பத்துடன் கூடிய பத்திரமொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளதாக, அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com