தொண்டமானும், சுரேஷும் மஹிந்தவின் பிணாமி அரசாங்கத்தில் ஒட்டியிருந்து , பின்னர் கழன்று விட்டனர். கிஷ்ணன் செல்வராஜ்.
ஆறுமுகன் தொண்டமானும், வடிவேல் சுரேஷும் மஹிந்தவின் பிணாமி அரசாங்கத்தில் ஒட்டியிருந்து, பின்னர் கழன்று விட்டதாக, அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிஷ்ணன் செல்வராஜ் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தினம், ஹட்டனில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணி காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு, ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொடுக்க முடியாவிட்டால் தமது பதவியைத் தூக்கி எறிவதாக ஆறுமுகன் தொண்டமானும், ஆயிரம் ரூபாயை பெற்றுக் கொடுக்க தீக் குளிக்க போவதாக சொன்ன வடிவேல் சுரேஷும் மஹிந்த ராஜபக்ஷவின் பிணாமி அரசாங்கத்தில் ஒட்டிக்கொண்டு, பின் அதிலிருந்து விலகியவர்கள்.
தொழிலாளர்களை அடமானம் வைத்து அரசியல் குளிர் காயும் இவர்கள் தற்பொழுது 750 ரூபாய் சம்பளத்தை வழங்கி, 234 ரூபாயை மாதாந்த சந்தா பணமாக பெற்றுக் கொள்ளவுள்ளனர்.
இந்த விடயம் தலைவர்களுக்கு வெற்றியே தவிர, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வெற்றி அல்ல.
அத்தோடு இது நியாயமான சம்பள உயர்வு அல்ல. இதற்காக எமது சங்கம், ஜே.வி.பி உள்ளிட்ட பல தரப்பினர்களுடனும் இணைந்து எதிர்காலத்தில் போராடவுள்ளோம்.
அதற்கு முன்பதாக இந்த புதிய ஒப்பந்தம் தொடர்பில், தமது தரப்புடன், நேரடி விவாதத்தை எதிர்கொள்ள ஆறுமுகன் தொண்டமானுக்கும், வடிவேல் சுரேசுக்கும் அழைப்பு விடுப்பதாக, அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிஷ்ணன் செல்வராஜ் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment