Sunday, January 27, 2019

பிரிக்க முடியாத இந்த நாட்டில், அனைத்து உரிமைகளையும், தமிழர்கள் அனுபவிக்க வேண்டும் - கலாநிதி சுரேன் ராகவன்.

பிரிக்க முடியாத இந்த நாட்டில் அனைத்து உரிமைகளையும் தமிழர்கள் அனுபவிக்க வேண்டும் என, வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி – அறிவியல் நகரில் புதிதாக அமைக்கப்பட்ட புகையிரத நிலையம் இன்று, மக்கள் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே வட மாகாண ஆளுநர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பிளவுபடாததும், பிரிக்க முடியாததுமான நாட்டில் அனைத்து உரிமைகளையும், சுதந்திரங்களையும் அனுபவிக்கும் நிலைக்கு தமிழர்கள் வர வேண்டும்.

அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதுடன், இது தொடர்பான கோரிக்கைகளை நாம் உரிய தரப்பினரிடம் முன்வைத்துள்ளோம்.

யுத்தம் நிறைவடைந்து பத்தாண்டுகளைக் கடந்து செல்லும் நாம், இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த ரயில்சேவையினை வடக்கையும் தெற்கையும் இணைக்கும் உறவுப் பாலமாகவே பார்க்கின்றோம்.

இது பிவிருத்தித் திட்டங்களின் மூலம் எமது வேற்றுமைகளைக் களைந்து செயற்படுவதற்கு ஒரு சந்தர்ப்பமாக அமையும்.

அத்துடன் எதிர்காலத்தில் இவ்வாறான பல அபிவிருத்தித் திட்டங்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு, நானும் எமது மக்களும் தயாராகவே இருக்கின்றோம் என வட மாகாண ஆளுநர் கலாநிதி, சுரேன் ராகவன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com