ஆவா குழுவின் உறுப்பினர்கள் மூவர் யாழில் கைது - காவல்துறை.
ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
இந்த மூன்று நபர்களும் யாழ்ப்பாணத்தில் வைத்து கைதானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்படும் போது, குறித்த நபர்களிடம் இருந்து இரண்டு வாள்கள் கைப்பற்றப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
தற்போது யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் வாள்வெட்டு தொடர்பாக கடந்த காலங்களில் பல்வேறு முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டன. குறித்த வாள்வெட்டுகளின் பின்னணியில் ஆவா என்ற குழு செயற்படுவதாக பல்வேறு தரப்பினரால் சந்தேகம் எழுப்பப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் ஆவா குழுவை சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரின் இன்று மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனை அடுத்து குறித்த மூவரிடம் தொடர் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment