Monday, January 28, 2019

பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை இன்று ஜனாதிபதியிடம் கையளிப்பு

இலங்கை விமான சேவையை மறுசீரமைப்பு செய்வதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக, கடந்த 7ஆம் திகதி அமைக்கப்பட்ட குழுவில் அறிக்கை, இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளது.

இலங்கை விமான சேவையை மறுசீரமைப்பு செய்வதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவில் 12 பேர் அங்கம் வகிக்கின்றனர். குறித்த 12 பேர் கொண்ட குழுவினர் இலங்கை விமான சேவையில் ஏற்பட்டுள்ள நட்டங்களைக் குறைத்து எதிர்காலத்தில் இலாபங்களை ஈட்ட எடுக்க வேண்டிய பரிந்துரைகளை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் தயாரிக்கப்பட்ட குறித்த பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை இன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com