Monday, January 28, 2019

முச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்கு அரசாங்கத்தின் புதிய சலுகை

முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் மோட்டார் வாகனங்களை பயன்படுத்தி வாடகை மோட்டார் வாகன சேவைகளை ஆரம்பிக்க 20 லட்சம் ரூபா நிவாரண கடன் திட்டமொன்றை அறிமுகப்படுத்த நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்த கடன் திட்டத்தை அறிமுகப்படுத்த அமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்துக்கு, அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் பிரகாரம், 35 வயதிற்கு மேற்பட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் இந்த கடனை பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்க முடியும் என்று நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com