Saturday, January 19, 2019

அரசியலமைப்பை மாற்றுவதன் மூலம், மக்களின் பிரச்சினைகளை நிவர்த்திக்க முடியாது, சம்பிக்க ரணவக்க திட்டவட்டம்.

அரசியலமைப்பை மாற்றியமைப்பதின் முலமாக மக்களின் பிரச்சினைக்கு சிறந்த தீர்வை வழங்க முடியாது என்ற உண்மையை, முதலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என, அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க இதனை கூறினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நினைப்பதைப் போன்று அரசியலமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலமாக, தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து விட முடியாதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்களின் தேவைகளை அறிந்து அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டு, மக்களுக்காக சேவையாற்றுவதே சிறந்த விடயமாக இருக்கும் என, அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com