Saturday, January 19, 2019

இலங்கையில் விமான நோயாளர் காவுகை வாகன சேவையை ஆரம்பிக்க, தீர்மானம் - ராஜித்த சேனாரத்ன.

இலங்கையில் நோயாளர் காவுகை வாகன சேவையை விரைவில் முன்னெடுக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

தலைநகர் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இதனை கூறினார்.
இலங்கையில் விமான நோயாளர் காவுகை வாகன சேவையொன்றை, ஆரமிப்பதன் மூலம் மக்களுக்கான சிறந்த சேவையை வழங்க முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

தற்போது நாட்டின் பெருமளவான பகுதிகளில் வாகன நெரிசல் அதிகரித்துள்ள நிலையில், நோயாளர்களுக்கு துரித கதியில் சேவைகளை வழங்கும் நோக்கிலேயே, இந்தத் திட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன கூறியுள்ளார்

இந்த திட்டத்தின் பிரகாரம், அதி நவீன வசதிகளுடன் கூடிய 140 விமான நோயாளர் காவுகை வாகனங்களை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் மேலும் கூறியுள்ளார்

இந்த சேவையின் மூலம் மக்களுக்கான சிறந்த சேவைகள் பெற்றுக் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com