Saturday, January 19, 2019

மீண்டும் வலுக்கும் 1000 ரூபாய்க்கான போராட்டம் - தலைநகரில் பதற்றம்.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை வேதனமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், இன்றும் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தலைநகர் கொழுப்பில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை, பெருந்தோட்ட உழைப்புரிமை ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல இளைஞர்கள் உள்ளிட்டவர்களின் பங்குபற்றுதலுடன், இந்த ஆர்ப்பாட்டம் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

இதன்போது, ஒரு வார பணிப்புறக்கணிப்பு, 1.25 பில்லியன் நட்டத்தை ஏற்படுத்தும்! - அரசே குறுக்கிடு’, ‘தோட்ட கம்பனிகளே, தொழிற்சங்கங்களே, அரசாங்கமே 1000 ரூபாய் அடிப்படை சம்பளத்தை உறுதிசெய்!’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை வலியுறுத்தி மலையகத்திலும், நாட்டின் ஏனைய பல பகுதிகளிலும் பொது மக்கள் உள்ளிட்ட சமூக நலன் விரும்பிகள் பலரால், பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கபப்ட்டு வருகின்றன.

தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் கூட்டு ஒப்பந்தத்தை நிறுத்த வேண்டும் என்பதும், அடிப்படை சம்பளமாக 1000 ரூபாவை வழங்க வேண்டும் என பெருந்தோட்ட தொழிலாளர்கள் தொடர்ந்து வலியுறுத்து வருகின்றனர்.

எனினும் இந்த பிரச்னை குறித்து மலையக மக்களின் பிரதிநிதிகள்,தொழற்சங்கங்கள் என்பன எந்தவித முன்னேற்றகரமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com