Sunday, December 30, 2018

பதவியை துறக்கப் போகிறாரா கிரியெல்ல?

அரச நிர்வாக மற்றும் மரபுரிமை துறை அமைச்சரான லக்ஸ்மன் கிரியெல்ல, தமது அமைச்சுப் பதவியை துறக்கப்போவதாக செய்திகள் கசிந்துள்ளன.

நேற்று வெளியிடப்பட்ட வர்த்தமானியின் பிரகாரம், அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவின் கீழ், எந்தவொரு அரச நிறுவனங்களும் பாரமளிக்கப்படவில்லை. இதனால், தமது ஆதரவாளர்களை லக்ஸ்மன் கிரியெல்ல சமாளிக்க முடியாத நிலை உருவாகலாம் என கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம், ஸ்ரீலங்கன் விமான சேவை, ஹில்ட்டன் ஹோட்டல் முதலான முன்னணி நிறுவனங்கள் என்பன மரபுரிமை அமைச்சின் கீழிருந்தன. எனினும் தற்போது அவையனைத்தும் கைநழுவி போயுள்ள நிலையில், அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தமது பதவியை துறக்கும் நிலை உருவாக்கலாம் என,சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com