Friday, October 26, 2018

ஜனநாயக விரோத சூழ்ச்சியாம் மங்கள.

நாட்டின் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டமை ஜனநாயக விரோதமும் அரசியல் யாப்புக்கு விரோதமானதும் என ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ள அவர் தொடர்ந்து கூறுகையில்:

பிரதமர் இறந்தால் அல்லது அவர் இராஜனாமா செய்தால் அன்றில் பெரும்பாண்மையை இழந்தால் பிரதமரை மாற்ற முடியும்.

ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியிடம் இதுவரைக்கும் பெரும்பாண்மை இருப்பதாக தெரிவித்துள்ள அவர், தமது பெரும்பாண்மையை மீண்டுமொருமுறை நிரூபிக்கும் பொருட்டு பாராளுமன்றினை கூட்டுமாறு சபாநாயகரை கோருகின்றார்.

மக்களவின் இவ்வேண்டுதலை அடுத்து, சபாநாயகர் கரு ஜயசூரிய நாளைய தினம் (27) நாட்டின் அரசியல் நிலைப்பாடு தொடர்பில் விசேட அறிவிப்பினை விடுக்கவுள்ளார்.

சட்ட விடயங்கள் தொடர்பில் தாம் ஆராய்ந்து வருவதாகவும் பக்கசார்பற்ற முறையில் தீர்மானத்தை அறிவிப்பதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

சபாநாயகரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதேநேரம் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் 11, பாராளுமன்ற உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் 16 உறுப்பினர்கள் மற்றும் ஈபிடிபி என்பன மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளதாக தெரியவருகின்றது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com