Wednesday, October 10, 2018

ஆட்டோவில் பசு மாடு கடத்தியவரை மடக்கிப்பிடித்த மட்டு இளைஞர்கள்.

இறைச்சிக்காக பசு மாடுகளை மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்திலிருந்து கடத்திச் செல்லமுற்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவரை பிரதேச இளைஞர்கள் மடக்கிப்பிடித்துள்ளனர்.

அத்துடன் குறித்த நபர்களுக்கு பிரதேச மாடுகளை கடத்திக்கொடுக்கும் பண்டார வெளியைச் சேர்ந்த நபரையும் இளைஞர்கள் பிடித்துள்ளதுடன், இவர்கள் மூவரையும் பொலிஸாரிடம் பாரமளித்துள்ளனர்.

குறித்த ஆட்டோ வண்டியும் பசு மாடும் பொலிஸாரின் பாதுகாப்பில் உள்ளது.

பன்னெடுங்காலமாக இப்பிரதேங்களில் மேற்கொள்ளப்படும் குறித்த களவிற்கெதிராக பொலிஸார் இதுவரை எவ்விதமான தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டுகின்ற அதேநேரம், கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் மற்றும் ஆட்டோ உரிமையாளருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளனர் என்பதை சந்தேகத்துடன் நோக்கி வருகின்றனர்.

இக் கள்ள மாட்டு வியாபாரம் நெடு நாட்களாக அப்பகுதியில் இடம்பெற்று வருகின்றது என்பதுடன் இவ்வாறு தங்கள் வளர்பு பசுவினை பறிகொடுக்கும் மக்கள் வாழ்வாதாரத்தினை தொலைத்து வறுமையில் வாடும் சந்தர்ப்பங்கள் பலவுள்ளது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com