Wednesday, October 10, 2018

களவில் ஈடுபட்ட விஜயகலாவின் ஆலோசகர் கைது.

விஜயகலா மகேஸ்வரனின் பெண் ஆலோசகரான, தெஹிவளை கெம்பல் பிளேஸ் இலக்கம் 14 என்ற முகவரியில் வசித்து வந்த ஷெரின் ஒஸ்மான் என்பவர், ஜனாதிபதி செயலகத்தின் கடித தலைப்பை போலியாக தயாரித்து மோசடியில் ஈடுபட்டு வந்ததாக கொழும்பு மோசடி தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்பாளர் ஒருவருடன் இணைந்தே மேற்படி கடிததலைப்பினை பயன்படுத்தி வந்துள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் இணைந்து ஐக்கிய அரபு ராஜ்யத்திலுள்ள இலங்கை தூதுவர் ஒருவரிடம் பணம் பெற்றுள்ளனர். விடயம் குறித்து விசாரணை மேற்கொண்ட மோசடித் தடுப்பு பிரிவினர், இவர்களை கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர் படுத்தியபோது, இருவரையும் எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.


குறித்த பெண் மேற்கண்டவாறு பல்வேறு மோசடிகளை செய்து வந்துள்ளார் எனத் தெரியவருகின்றது.

விஜயகலாவின் சகாக்கள் பலர் இவ்வாறு மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர் என மக்கள் விசனம் அடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் விஜயகலாவின் நெருங்கிய சகாக்கள் இருவர் யாழ் இளைஞன் ஒருவரிடம் ஏழு லட்சம் பணம் ஏமாற்றியதாக கைது செய்யப்பட்டு தற்போது பணத்தை எதிர்வரும் 21ம் திகதி நீதிமன்றில் திருப்பியளிக்கவேண்டும் என்ற நிபந்தனையுடன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை யாவரும் அறிந்ததே.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com