Wednesday, October 10, 2018

நானல்ல எனது தம்பியே ஜனாதிபதியாக பொருத்தமானவர். கோட்டா

எதிர்வரும் தேர்தலில் ராஜபச்சர்கள் தரப்பிலிருந்து களமிறக்கப்படவுள்ள வேட்பாளர் யார் என்பது தொடர்பில் தொடர்ந்து பல்வேறுப்பட்ட செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்ற நிலையில், அடுத்த அரச தலைவர் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்கப் பொருத்தமானவர் பசில் ராஜபக்சவே எனத் தெரிவித்துள்ளார் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச.

டி.ஏ.ராஜபக்ச நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு அரச நிதி பயன்படுத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டுத் தொடர்பான வழக்கு நேற்றுச் செவ்வாய்க்கிழமை சிறப்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கு விசாரணைகளை முடித்து வெளியேறிய கோத்தபாயவிடம், ஊடகவியலாளர்கள், எதிர்வரும் தேர்தலின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கேட்டபோது மேற்கண்டவாறு தெரிவித்த அவர், குறித்த கருத்த தனது தனிப்பட்ட கருத்தேயாகும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அங்கு கருத்த தெரிவித்த அவர் :

தற்­போ­துள்ள அரசு மிக மோச­மான நிலை­யில் உள்­ளது. பொரு­ளா­தார, அர­சி­யல் நிலைத்­தன்­மை­யற்று உள்­ளமை வெளிப்­ப­டை­யா­கத் தெரி­கின்­றது. இப்­ப­டி­யான அரசை வீட்­டுக்கு அனுப்­பு­வதே பொறுத்­த­மா­ன­தா­கும். அதற்கு பொருத்­த­மான எதிர்க்­கட்­சி­யின் வகி­பா­கம் அவ­சி­ய­மா­னது.

எதிர்க்­கட்­சி­கள் இணைந்து இத­னைச் செய்ய வேண்­டும். எவ்­வாறு அதைச் செய்­வார்­கள் என் பது எனக்­குத் தெரி­யாது. அதைச் சரி­யான தரப்­பி­னர் முன்­னெ­டுப்­பர் – என்­றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com