Monday, October 8, 2018

முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் 5000 உள்ளதாக கருத்து வெளியிட்டவர் சீஐடி விசாரணையில்.

முன்னாள் புலிகள் மற்றும் புலிகளிலிருந்து விலகியோர் முஸ்லிம் மக்களிடமும், அரசியல் வாதிகளிடமும் தங்கள் ஆயுதங்களை விற்றுள்ளதாகவும் அவ்வாறு விற்கப்பட்ட ஆயுதங்கள் சுமார் 5000 வரை முஸ்லிம்களிடம் இருப்பதாகவும் புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரான இன்பராஜா கடந்த 20ம் திகதி ஆகஸ்ட் மாதம் கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்திருந்தார்.

இன்பராஜா வெளியிட்ட கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்ததுடன் முஸ்லிம் அரசியல்வாதிகள் அவருக்கு எதிராக முறைப்பாடுகளும் செய்திருந்தனர்.

இந்நிலையில் இன்பராச இன்று கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டள்ளார். விசாரணைக்கென சிஐடி யினரின் தலைமையகத்திற்கு சென்ற அவர் பல மணி நேரம் சென்றும் திருப்பவில்லை என்றும் தடுத்துவைத்து விசாரிக்கப்படலாம் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து அறியக்கிடைக்கின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com