Monday, October 8, 2018

தூக்கில் தொங்கிய நிலையில் இளம் ஆசிரியரின் உடலம்.

ஆசிரியர் கலாச்சாலை விடுதியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இன்று (08) காலையில் மட்டக்களப்பு தாளங்குடா ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

முல்லைதீவு, கொத்தனி பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய எம். பிரதீப் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த ஆசிரியர் கலாச்சாலையில் கடந்த ஜூன் மாதம் ஆரம்பமான முதலாம் பிரிவில் பயிற்சி பெற்றுவரும் இவர் சம்பவதினமான இன்று வழமை போல கலாச்சாலையில் பயிற்சி பெற்றுவந்த நிலையில் காலை 11 மணிக்கு விடப்பட்ட இடைவேளையில் குறித்த நபர் விடுதியில் சென்று அங்குள்ள மின்சார விசிறியில் கயிற்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில் இந்த அறையில் தங்கிருந்த ஆசிரியர் ஒருவர் குவளை ஒன்றை எடுக்க சென்றபோது, இவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையினை கண்டு நிர்வாகத்திடம் தெரிவித்ததை அடுத்து அவர்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு தெரிவித்தனர்.

இவர் காதல் பிரச்சினையினால் தற்கொலை செய்து கொண்டார் என பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் தெரிய வந்துள்ளதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com