Saturday, October 27, 2018

50 வாரம் ஜனாதிபதியாகவிருந்த மைத்திரி 50 சதத்துக்கு பெறுமதி அற்றவராம். கொழும்பை சுற்றி வளைக்க போறாங்களாம் ஐ.தே.க.

ஐப்பது வாரங்கள் இந்நாட்டின் ஜனாதிபதியாகவிருந்த மைத்திரிபால சிறிசேன ஐம்பது சதங்களுக்கு பெறுமதியற்றர் என ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப்பேச்சாளர் ஹரின் பெர்ணாண்டு தெரிவித்துள்ளார்.

நன்றியுணர்வு அற்ற மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக கொண்டுவந்ததற்காக நாம் மக்களிடம் மன்னிப்பு கோருகின்றோம் என ஹரின் பெர்ணாண்டோ மேலும் கூறியுள்ளார்.

அலறிமாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதேநேரம் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கம் செய்தமையை எதிர்த்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

நாளை மறுதினம் முழுக்கொழும்பும் ஸ்தம்பிதமடையும் பொருட்டு அவர்கள் தமது ஆதரவாளர்களை கொழும்பு நகருக்குள் இறக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com