Saturday, October 27, 2018

23 உறுப்பினர்களுடன் மஹந்தவுடன் இணையும் ரவி கருணாநாயக்க நிதியமைச்சராகலாம்..

நீண்டகாலமாக திரைமறைவில் இடம்பெற்றுவந்த அரசியல் பனிப்போர் நேற்று வெளிப்படையானது. மஹிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டார். அது அரசியல் யாப்பிற்கு முரணான நியமனம் என்கின்றனர் ஐ.தே.கட்சியினர். ஆனால் பாராளுமன்றில் பெரும்பாண்மையை நிரூபிக்கும் என நம்பும் ஒருவரை பிரதமராக நியமிக்க ஜனாதிபதிக்கு முடியும் என்கின்றனர் சட்டவல்லுனர்கள்.

இந்நிலையில் பாராளுமன்ற பெரும்பாண்மையை நிரூபிக்கும் பொருட்டு கூடவுள்ள பாராளுமன்றில் ரவி கருணாநாயக்க தலைமையிலான 23 ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் மஹிந்த ராஜபக்ச பக்கம் தாவுகின்றனர் என பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர் ஒருவர் இலங்கைநெட் க்கு தெரிவித்தார்.

அவ்வாறு அவர்கள் இணைகின்றபோது, அமையவுள்ள அமைச்சரவையில் ரவி கருணாநாயகவிற்கு நிதியமைச்சு வழங்கப்படலாம் என்றும், மறுபுறத்தில் பிணைமுறி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவ் நியமனத்திற்கு எதிர்ப்புக்கள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மறுபுறத்தில் ரவி கருணாநாயக்கவை மஹிந்தவுடன் இணையவேண்டாம் என்றும் அவருக்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினை தருவதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதை ரவி நிராகரித்துள்ளதாக தெரியவருகின்றது.

அதேநேரம் இன்று முழுவதும் ரவியை ரணில் தரப்பினர் தொடர்பு கொள்ள முயற்சித்தபோதும் அது கைகூடவில்லை என்றும் அறிய முடிகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com