Monday, September 3, 2018

வரலாறு காணாத மக்கள் கூட்டம் நாளை மறுதினம் அரசுக்கு எதிராக கொழும்பில் கூடுகின்றது.

இலங்கை அரசியல் வரலாற்றில் முதல் முறையாக கொழும்பு நகரில் ஒன்றுகூட பெரும் திரளான மக்கள் தயாராக இருந்து வருகின்றனர் என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கூட்டு எதிர்க்கட்சியினர் கொழும்பில் நாளை மறுதினம் நடத்தவுள்ள “மக்கள் சக்தி கொழும்புக்கு” என்ற ஆர்ப்பாட்ட நடவடிக்கை தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து குழப்பமடைந்துள்ள அரசாங்கம், அங்குமிங்கும் ஓடி திரிகிறது. மாகாண சபைகள் ஊடாக பேருந்துகளை தடுத்து நிறுத்த அரசாங்கம் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

கிராம மட்டத்தில் உள்ளூராட்சி சபைகளின் பிரதிநிதிகளை அரசாங்கம் அச்சுறுத்தி வருகிறது என்ற தகவல் எமக்கு கிடைத்துள்ளது.

அதேவேளை குருணாகல் மேல் நீதிமன்றத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை விளக்கமறியலில் வைத்து வழக்கு விசாரிக்கப்படுகிறது.

50 லட்சம் ரூபாயை வெள்ள நிவாரணமாக வழங்கியதாக குற்றம் சுமத்தி முன்னெடுக்கப்படும் வழக்கில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். எனினும் கோடிக்கணக்கில் கொள்ளையிட்ட அலோசியஸ் முதலாளியின் மாமனார் இன்னும் சிங்கப்பூரில் இருக்கின்றார்.

இவர்களிடம் தேர்தலுக்கு பணம் வாங்கிய, புத்தகங்களை எழுதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதுவும் நடக்காது போல் இருந்து வருகின்றனர். அடக்குமுறையில் தமது ஆட்சியை முன்னெடுப்பதை தவிர அரசாங்கத்திற்கு வேறு வழி கிடையாது.

அரசாங்கம், நாட்டு மக்களையும் அரசியல்வாதிகளையும் எதிர்க்கட்சிகளையும் அடக்கி, தமது ஆட்சியை முன்னெடுக்க எதிர்ப்பார்துள்ளது எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com