Tuesday, September 4, 2018

ஐயோ எனது மருமகனுக்கு அல்-கைதாவுடன் தொடர்பே இல்லை! கூறுகிறன்றார் பைஸர் முஸ்தபா

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தவர் இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் நெருங்கிய உறவினர் என்றும் இலங்கை வங்கியின் முன்னாள் தலைவர் ஜெஹான் காசிம் என்பவரின் பேரன் என்றும் அந்நாட்டு தேசிய ஊடகமான ஏபிசி செய்தி வெளியிட்டிருந்தது யாவரும் அறிந்த விடயம்.

அவுஸ்திரேலியாவில் ஐஎஸ் அமைப்பின் சார்பில் தாக்குதல்களை மேற்கொள்வதற்காக திட்டமிட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நிஜாம்டீன் ஆபத்தான தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டிருந்ததாக அவுஸ்திரேலிய பொலிஸார் உத்தியோக பூர்வமாக அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் சந்தேக நபர் அவுஸ்திரேலியாவையும் தாண்டி, இலங்கையுடனே அதிக தொடர்புகளை கொண்டிருந்தார் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இதேவேளை கைது செய்யப்பட்டவரின் சகோதரரான ஒருவர், நிஜாம்டீன் வெளிப்படையான முஸ்லிம் என்றும் அவுஸ்திரேலிய நகரமொன்றிற்கு இவ்வளவு மோசமான குற்றங்களை இழைப்பது குறித்து சிந்திக்க வேண்டிய தேவையில்லை என்றும் நிஜாம்டீன் கைது செய்யப்பட்ட பின்னர் எங்களால் அவருடன் தொடர்புகொள்ள முடியவில்லை, நாங்கள் அநாவசிய சம்பவங்கள் காரணமாக மனமுடைந்து போயுள்ளோம் எனவும் பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார் எனவும் ஏபிசி தெரிவித்திருந்தது.

ஆனாலும் நிஜாம்டீன் மிகவும் ஆபத்தான நபர் என, அவரிடமிருந்து மீட்கப்பட்ட நாட்குறிப்பின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இவர் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பொலிஸார் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட பலரை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அத்துடன் சிட்னி நகரின் பல பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிஜாம்டீன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவர் 15 வருட சிறைத்தண்டனையை எதிர்கொள்ள வேண்டி வரும் எனவும் அவுஸ்திரேலிய தேசிய ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தன் மருமகன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை மறுத்துரைத்துள்ள அமைச்சர் பைஸர் முஸ்தபா தன்து மருமகன் ஓர் பயங்கரவாதி என தான் நம்பவில்லை எனவும், தனது மருமகன் ஒரு அப்பாவி தெரிவித்துள்ளார்.

மேலும், தனது மருமகன் தவறு இழைத்திருக்க மாட்டார் என தமது குடும்பத்தினர் நம்புவதாகவும், நீதித்துறைக்கு மதிப்பு கொடுப்பதன் காரணமாக நீதித்துறையின் தீர்ப்பு வரும் வரை காத்திருப்பதாகவும் அமைச்சர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com