Thursday, January 28, 2016

போர்குற்ற விசாரணகளை உள்நாட்டு நீதிபதிகளே மேற்கொள்வர். ராஜித திட்டவட்டம்

நாட்டில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பமானால் அவற்றை உள்நாட்டு நீதிபதிகளே விசாரிப்பர் என அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில், ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு கூறியுள்ள அவர் இதுவிடயத்தில் வெளிநாட்டு தொழிநுட்பம் மற்றும் உதவிகளை மட்டுமே பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு உதவி எனக் குறிப்பிடுவது, வெளிநாட்டு நீதிபதிகளின் பங்கேற்பு அல்ல என தெளிவாக கூறிய அவர், அந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது உள்நாட்டு நீதிபதிகளின் உதவியுடன் மட்டுமே எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com