Saturday, January 23, 2016

சேரன் புலிவால் பிடித்த வரலாறு சொல்கின்றாா் அவுஸ்திரேலியாவிலிருந்து டாக்டா் நடேசன்.

இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு நடந்துள்ளது இனப்படுகொலைதான் என்பது எனது வாதம் - சேரன்:-

இந்த மக்கள் தீர்ப்பாயத்தில் இனப் படுகொலை தொடர்பான எனது கருத்துக்களையும் வாதங்களையும் முன்வைக்க வாய்ப்பு வழங்கியமைக்கு எனது மனமார்ந்த நன்றி. என்னுடைய வாதங்களின் மையப்பொருள், சமூகவியலாளர்களும் மானுடவியலாளர்களும், இனப்படுகொலை என்றால் என்ன எத்தகைய எண்ணங்களைக் கொண்டிருக்கிறார்கள்? இந்த எண்ணங்கள் எவ்வகையில் ஈழத் தமிழ் இனப்படுகொலையை 'இனப்படுகொலை' என வரையறை செய்ய உதவக்கூடும்? என்ற இரு கேள்விகளையும் ஒட்டியதாக அமைந்துள்ளது. மூன்று வெவ்வேறான, ஆனால் தமக்குள் இணகக் மான உறவுகளைக் கொண்டிருக்கும் தளங்களிலிருந்து என்னுடைய பார்வையையும் வாதங்களையும் முன்வைக்கிறேன்.

முதலாவது தளம் ஊடகவியலாளர் என்பது. 1984 – 1987 வரை முழுநேரப் பத்திரிகையாளனாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான Saturday Review என்ற ஆங்கில வார இதழில் பணிபுரிந்தேன். அதற்குப பிற்பாடு கொழும்பிலிருந்து வெளியாகிய 'சரிநிகர்' இதழில் பத்து ஆண்டுகள் பணி யாற்றியிருக்கிறேன். இந்தக் காலகட்டங்க ளில் ஏராளமான படுகொலைகள், மனித உரிமை மீறல்கள், சித்திரவதை என்பன பற்றி அறிக்கையிட்டிருக்கிறேன். ஏராளமான சாட்சியங்களையும் திரட்டியிருக்கிறேன். பல படுகொலைகளுக்கும் குண்டு வீச்சுக ளுக்கும் வேறு வகையான தாக்குதல்க ளுக்கும் நேரடியான சாட்சியாகவும் இருந்திருக்கிறேன்.


என்னுடைய இரண்டாவது தளம் பல்கலைக் கழகம், ஆய்வு, கல்வித் துறை சார்ந்தது. இப்போது கனடாவின் வின்ஸர்பல்கலைக் கழகத்தில் சமூகவியல், மானுடவியல், குற்ற வியல் துறையில் ஒரு பேராசிரியராக இருக்கிறேன். இனத்துவ முரண்பாடுகள், இனப்படுகொலை, புலம் பெயர்வு, உலகமயமாக்கம் என்பன எனது ஆய்வுத் துறைகள். இந்தத் துறைகளிலேயே எனது பல்கலைக்கழகக் கற்பித்தலும் அமைந்திருக்கிறது.

மூன்றாவது தளம், நான் ஒரு கவிஞன், நாடகாசிரியன் என்பது. என்னுடைய அனுபவங்களும் சிந்தனையும் எண்ணங்களும் ஆய்வுகளும் இந்த மூன்று தளஙக்ளையும் இடைவெட்டியதாகவே அமைகின்றன. 1956 – 2009 காலக்கட்டப் குதியில் ஈழதத்மிழர்கள் மீது நிகழத்தப்பட்ட வன்முறைகள் படுகொலைகள், பேரழிவு என்பன தொடர் பாகக் கணிசமான அளவு ஆதாரங்கள் இந்தத் தீர்ப்பாயத்தில் சமரப்பிக்கப்ட்டுள்ளன. அவற்றோடு ஐ.நா அவையின் சிறப்பு ஆறிக்கை, வடக்கு - கிழக்கு மனித உரிமைகள் அலுவலகம் (NESHOR) திரட்டி வெளியிட்டிருக்கும் தமிழினப் படுகொலைகள் பற்றிய நூல், அனைத்துலக மன்னிப்புச்சபை (Amnesty International) தொடர்ச்சியாகத் தொகுத்து வெளியிட்டுள்ள அறிக்கைகள்,Human Rights Watch, International Crisis Group அறிக்கைகள், சனல்-4 ஆவணப்படங்கள், இனப்படுகொலையில் தப்பிப் பிழைத்தோரின் வாக்குமூலங்கள் எனப் பெருமளவு ஆதாரங்கள் தீர்ப்பாயம் முன்னே உள்ளன. இத்தகைய ஆதாரங்களுக்கு அப்பால், எவ்வகையில் இந்த ஆதாரங்களை சமூகவியல், மானுடவியல் நோக்கில் நாங்கள் புரிநது கொண்டு விளக்கம் தரமுடியும் எனபது எனது அக்கறைகளுள் தலையாய ஒன்றாகும்.

சேரனின் வாதத்தில் ஓட்டைகள் - நடேசன்

ஓரு புலி எதிர்பாளராக இருந்த சேரன் , ஜெயபாலன் போன்றவர்கள் நோர்வேயின் தலையீட்டின் பின்பு புலிகள் நிரந்தரமானவர்கள் என எண்ணியதால் தமிழ் தேசியம்பேசியதோடு புலிவாலைப்பிடித்தார்கள். ஆனால் புலி வாலை மட்டும் இவர்களிடம் கொடுத்துவிட்டு இறந்துவிட்டது . ஆனால் புலியின் வாலைபிடித்தவர்கள் விடமுடியாது என்பது முரண்ணகை(Irony)

புலியின் பேரில் காசு உழைத்தவன், ஆயுதம் வாங்கியவன் எல்லாம் தங்கள் பிஸ்டத்தில் ஒட்டின தூசுபோல் தட்டிவிட்டு போய்விட்டார்கள். சேரன் , ஜெயபாலன் மூச்சு அடங்கும் வரையும் புலிவாலை விடமுடியாது. நல்ல கவிஞர்களாகிய இவர்களது நிலைமை மிகச் சோகமான விடயம்தான்.

சேரன் தன்னை வெளிப்படுத்தும் கட்டுரை -அதாவது அதிகாலை நேரத்தில் பெட்டையைத்தேடும் ஆண்மயில்போலத் தன்னை வெளிப்படுத்தியுள்ளார்.

இலங்கையில் நடந்த போராட்டத்தை ஒரு தமிழ்பேசும் மக்களின் சமஉரிமைப்போராட்டமாக கொண்டு சென்றிருந்தால் போராட்டம் வென்றிருக்கும். வட கிழக்கு மாகாணத்து தமிழர்களது இனப்போராட்டமாக இதை மாற்றியபின் அரசாங்கம் தமிழர்கள் மேல் ஒடுக்குமுறையைப் பாவிப்பது நமக்குப் புரிந்திருக்கவேண்டும் .

இனப்படுகொலை (Genocide) என்பது மிகவும் சிக்கலான, பேரதிர்ச்சி தரும் ஒரு நிகழ்வு. இதனை வெறுமனே அனைத்துலகச் சட்டங்கள் (International Law) மூலம் மட்டுமே புரிந்து கொள்ள முயல்வதும் வரையறை செய்ய முற்படுவதும் சாத்தியமில்லை என்பது எனது வாதம் ஆகும். நடைமுறை, செயற்பாடு என்ற வகையில் இனப்படு கொலையாளரைக் குற்றக் கூண்டுக்குள் சிறைப்படுத்துவதற்குச் சட்டஙக்ளும் சட்டத்துறை சார்ந்த நுண்மையான நிபுணத்துவமும் அவசியம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன் எனினும், 'இனப்படுகொலை என்பது என்ன?' என வரையறை செய்வதிலும் பல்வேறுபட்ட வடிவங்களில் இடம்பெறும் இனப் படுகொலைகளை இனங்கண்டு கொள்வதிலும் அனைத்துலகச் சட்டத்துறை போதுமானதலல்ல எமககு; சமூகவியல், மானுடவியல், மானுடப் பண்பியல் சார்ந்த அணுகுமுறைகளும் அவசியம் என்பதைப் பல சட்டவல்லுநர்களும் புலமையாளரும் மீள மீள வலியுறுத்துகின்றனர். 1948ல் உருவாகக் பப்பட்ட இனப்படுகொலை தொடர்பான ஜெனிவா உடன்படிக்கை (Geneva Convention) இன்றைய காலத்துக்கேற்ற வகையில் புதுமையும் மாற்றமும் பெறவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். அனைத்துலகச் சட்டங்களும் அவற்றின் எண்ணக்கருக்களும் மெல்ல மெல்லப் பரிணாமம் பெற்றுவருகின்றன என்பது உண்மை எனினும் உலக நிகழ்வுகளும் போரும் வன்முறையும் படுகொலைகளும் மிக விரைவாகப் பெருகிவிட்டன என்பதையும் நாம் கவனத்திலெடுக்க வேண்டும். இந்த வேகத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் அனைத்துலகச் சட்டங்களும் சட்டப் பொறிமுறைகளும் மாற்றமும் வளர்ச்சியும் பெறவில்லை. இனப்படு கொலை தொடர்பாகவும் எமக்குப் புதிய வரைவிலக்கணங்களும் பார்வைகளும் மிக அவசியமாக உள்ளன.

எனவே, ஹெலன்பெயின் (1990) என்னும் அறிஞரின் கருத்துக்களை வழிமொழிந்து இனப்படுகொலை என்பதைப் பின்வருமாறு வரைவிலக்கணம் செய்ய விரும்புகிறேன்.'தொடர்ச்சியாகவும் திட்டமிடப்பட்ட முறையிலும் ஒரு மக்கள் கூட்டத்தை அல்லது இனக் குழுமத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் சமூகநிலை சார்ந்தும் உயிர்முறை சார்ந்தும் அழித்தொழிக்க முனைவது அல்லது அழித்தொழிப்பது இனப்படுகொலை ஆகும் என்பது பொருத்தமான எளிமையான அதேநேரம் சுருக்கமான வரைவிலக்கணமாக அமையமுடியும் என நான் கருதுகிறேன். இப்போது நடைமுறையிலிருக்கும் அனைத்துலகச் சட்டங்கள், அனைத்துலக நிறுவனங்கள், ஐக்கியநாடுகள் அவை, அனைத்துலக நாணய நிதியம் போன்ற அமைப்புக்கள் அனைததுமே 'நாடு – அரசு' (Nation – State) என்பதை மட்டுமே கருத்திலும் கவனத்திலும் நடைமுறையிலும் கொண்டவை நாடுகள் இல்லாத எந்தத் தேசிய இனம்/ இனக்குழுமம் / மக்கள் கூட்டத்துக்கு இத்தகைய அமைப்புக்களில் பிரதிநிதித்துவமும் கிடையாது, அவை பற்றிய அக்கறையும் இல்லை. நாடற்ற தேசியங்கள், இடமற்ற இனக்குழுமங்கள், பல நாடுகளுக்கிடையே சிக்குண்டு கிடக்கும் புவியியலில் சிதறிக் கிடக்கும் குர்தீஷ் மக்கள், காஷ்மீரீ மக்கள், தமிழர் போன்ற இனக் குழுமங்களுக்கு இப்போதுள்ள அனைததுலக நிறுவன அமைப்புக்களில் இடம் கிடையாது. நவீன இனப்படுகொலைகள் இத்தகைய மக்களை நோக்கித்தான் குறிவைக்கப்பட்டுள்ளன என்பதையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

குறிப்பாகத் தன்னாட்சி அல்லது தனிநாடு அல்லது தமக்கெனச் சுயநிண்ய உரிமையைக் கோரும் மக்களை நோக்கியே இனப் படுகொலை ஏவப்பட்டுள்ளது என்பதை நாங் கள் அவதானிக்க முடியும். இதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. அவற்றுள் சிலவற்றைக் குறிப்பிடுகிறேன். பிரேஸிலின் பூர்விகக் குடிகள் (1957 – 1968), திபேத் (1959லிருந்து இன் றுவரை), பயா/பரா போர், நைஜீரியா (1967 – 1970), பரகுவேயில் அச்சே பூர்விகக் குடிகள் (1968 – 1978), பங்களாதேஷ் / கிழக்குப்பாகிஸ்தான் (1971), குவாட்டமாலா(1968 – 1996), ஈழத்தமிழர்கள் (1983 –2009). படுகொலைகள்,

இனத்துவச் சுத்திகரிப்பு (Ethnic Cleaning) போன்ற சொற்கள் / சொற்றொடர்களின் பயன்பாட்டுக்கு இன்றைய அனைததுலகச் சட்டப் பொறிமுறைகளில் எந்த வகையான பயன்பாடும் இல்லை. இத்தகைய அநியாயங்களுக்கும் இனப்படு கொலைகளுக்கும் பொறுப்பாக இருப்பவை நாடுகளும் அரசுகளும்தான். இந்த நாடுகளும் அரசுகளும் சேர்ந்துதான் அனைத்துலகச் சட்டங்களையும் நீதி முறைமைகளையும் உருவாக்கியிருக்கிறார்கள். எனவே இவர்களிடமிருந்து, இனப் படுகொலையாளர்களிடமிருந்து எவ்வாறு முற்றான நீதியை எதிர்பார்க்க முடியும்? ஒன்றில் மறுப்பார்கள், அல்லது மறைப்பார்கள். அதுதான் அவர்கள் செய்வது. அனைத்துலகச் சட்டப் பொறிமுறைகள், நீதிமுறைமை என்பன ஆண்டுக்கணக்காக இழுபடக்கூடியவை அன்றே தீர்ப்பு வழங்கும் வலுவற்றவை. இதனால் இனப் படுகொலையாளர்களும் இனப்படு கொலை புரிந்த அரசுகளும் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும், தடயங்களை அழிக்கவும் நிறைய வாய்ப்பு விரும்பியோ விரும்பாமலோ வழங்கப்படுகிறது என்பதை நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இலங்கையில் 1915 முஸ்லிம் - சிங்கள கலவரம் வெடித்தது அது எதைக்காட்டுகிறது ? அப்பொழுது சிங்கள அரசா ஆட்சியில் இருந்தது...? இல்லையே.

இலங்கையில் இனமுரண்பாடுகளை இலகுவாக தூண்டமுடியும். இது பெரும்பாலான நாடுகளுக்குப் பொருந்தும் .பாகிஸ்தானில் அகமதியர், சியா என மதக்கலவரங்கள் ஏற்படுகிறது. இவைகள் நாளாந்தம் தொடருகின்றன். இந்தியாவில் மதம், இனம் என்ற வேறுபாட்டை விடுங்கள். நாளாந்தம் தலித் என்று போரட்டமும் கொலையும் நடக்கிறது. இவை எல்லாவற்றையும் எடுத்துப் பிரிவினைனக்கான ஆயுதப்போராட்டமாக நடத்தமுடியுமா? அப்படி நடந்தால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும்?

இலங்கையில் நடந்த தமிழ்- சிங்கள் இன வன்முறைகள் 58, 77, 83 என்பன கூர்ந்து பார்த்தால் அவை வித்தியாசமானவை
58ம் வருடத்தில் நடந்த கலவரத்தின் முதல் கொலை மட்டக்களப்பில் தொடங்கியது .அது உண்மையாக இரு இனத்தவருக்கும் இடையே நடந்த இனகலவரம். அரசாங்கம் உடனே நடவடிக்கை எடுக்கவில்லையென்றாலும் இராணுவமும் பொலிசும் பாரபட்சமற்று நடந்ததற்கு பல ஆதாரங்கள் உள்ளது .

77 ல் அரசாங்கத்தின் கையும் பொலிசும் கலகக்காரருக்கு ஆதரவாக இருந்தது . இராணுவம் பாரபட்சமாக இல்லாது நடுநிலையாக இருந்ததற்கு பல ஆதாரம் உளளது.

83 கலவரம் அரசாங்கத்தால் நடத் தப்பட்டது . இராணுவம் பொலிஸ் என்ற பாதுகாப்பு படைகள் சிங்கள காடையர்களுடன் சேர்ந்து தொழில்பட்டது.

இதிலிருந்து சேரன் சமூகவிஞ்ஞானியாக நடக்காமல் சாதாரண மனிதராக எல்லாவற்றையும் ஒரே மூடையில்போடுகிறார்.

உண்மையான விஞ்ஞானம் படித்தவர்கள் ஒவ்வொருசம்பவத்தையும் பிரித்து ஆராய்வார்கள். அதன்மூலம் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காணமுடியும் என்பதால்.

இலங்கையில் தனிநாடு கேட்டுப் போரிடாத மலையகத் தமிழர்கள் மீது பெருமளவில் எதுவும் நடைபெறாதது மட்டுமல்ல மலைநாட்டு தமிழர்கள் வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளதும் அவர்களது பாராளுமன்ற அங்கத்துவமும் அமைச்சரவையில் எண்ணிக்கையும் அதிகரித்தது. இதன்மூலம் அவர்கள் அரசில் பங்கு பெறுகிறார்கள். தங்களை முன்னே கொண்டு செல்கிறார்கள். தமிழர்கள் என்பதால் ஒடுக்கப்படவில்லை. இதன்மூலம் இனக்கொலை செய்த அரசாங்கம் என்ற சேரனின் குற்றச்சாட்டு காற்றில் பறக்கிறது.
தமிழ்பேசும் இஸ்லாமியர் சகலவிதத்திலும் உயர்வடைந்திருப்பதும் , சிறுபான்மையினரை தாக்கும் அரசாங்கம் என்ற குற்றசாட்டிலும் பலவீனத்தை காட்டுகிறது. நமக்கு புரிவது அரசாங்கத்தின் மீது போர்தொடுத்தவர்கள் வடகிழக்கு தமிழர்கள் என்பதே. அவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருப்பதை காட்டுகிறது.

நான் தமிழ் இனம் போராடக்கூடாது என சொல்லவில்லை . ஆனால் பின்விளைவுகளை புரியாத முட்டாளாக இருக்கவேண்டாம் என்பதே எனது கோரிக்கை. தோற்றதால் ஏற்பட்ட விளைவுகளை எண்ணவில்லை.

இந்தப் பின்னணியில் இரண்டு புதிய கருத் துருவங்களை அல்லது எண்ணக்கருக்களை நான் முன்வைக்க விரும்புகிறேன். இவற்றைப் பற்றி இனப்படுகொலை தொடர்பாகத் தொடர்ச்சியான ஆய்வுகளை மேற்கொண்டு வரும் அலெக்சாந்தர் லபான்ஹின்டன் (2002), இஸரேல் சார்ணி (1994)போன்றோர் நிறையவே எழுதியுள்ளனர். முதலாவது 'இனப்படுகொலைக்கான முன்னோடித் தயாரிப்பு' (Genocidal Priming) என்பது. இரண்டாவது இனப் படுகொலையை உள்நோக்கமாகக் கொண்ட கூட்டுப்படுகொலைகள் (Genocidal Massacres). இந்த இரண்டு வழிமுறைகளும் பின்னர் இனப் படுகொலைக்கு நேரடியாகவே இட்டுச் செல்கின்றன. இனப்படுகொலைக்கான முன்னோடித் தயாரிப்பு என்பது ஆண்டுக்கணக்காக மெல்ல மெல்ல இடம்பெற்று வருவது, மாற்று இனத்தவர்களின் குடியேற்றம் வெறுப்பு ஏற்படக் கூடிய வகையில் 'மற்றவர்'களைப் பற்றிக் கல்வியிலும் பாடப்புத்தகங்களிலும் வரலாற்றெழுதலிலும் சித்தரிப்பது, திட்டமிட்ட ஒடுக்குமுறை, பண்பாட்டு அழிப்பு என்பன இந்த வகையுள் அடங்கும்.

இலங்கை அரசு தொடர்ச்சியாகவும் திட்டமிட்டும் இத்தகைய நடவடிக்கைகளில் 1948 இலிருந்தே ஈடுபட்டு வந்தமை தொடர்பான ஆவணங்கள் தீர்ப்பாயத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 1956, 1958, 1977, 1983 ல் நடந்தேறிய ஈழத் தமிழருக்கு எதிரான 'கலவரங்கள்' இந்த வழிமுறையின் தர்க்கரீதியான விளைவுதான். இனப்படுகொலையை உள்நோக்கமாகக் கொண்ட கூட்டுப் படுகொலைகள் வெறுப்பின் அடிப்படையில் நிகழ்த்தப்படுபவை. விடுதலைப் போராளிகள் அரச படையினர் மீது தாக்குதல் தொடுத்தமைக்குப் பதிலடியாகப் பொதுமக்களை அழிப்பதும் ஊர்களை எரித்து அழிப்பதும் இலங்கையில் பரவலாக நிகழ்ந்தவை.

ஜுன் 1956 – டிசம்பர் 2008 காலப்பகுதியில் இனப் படுகொலையை உள்நோக்கமாகக் கொண்ட 145 கூட்டுப் படுகொலைகள் ஈழத்தமிழர் வாழும் பகுதிகளில் இடம் பெற்றுள்ளன. தமிழ் மக்களுக்கெதிரான 'கலவரங்களை'யும் போர் உச்சம் பெற்றிருந்த காலத்தில் இடம்பெற்ற கூட்டுப் படுகொலைகளையும் நான் இந்தப் பட்டியலில் சேர்க்கவில்லை. இந்தக் கூட்டுப் படுகொலைகளில் 41 படுகொலைகள், இடம்பெற்ற ஊர்களுக்கு நான்சென்று தப்பிப் பிழைத்தவர்களை நேர்காணல் செய்திருக்கிறேன். அல்லது அந்தப்படுகொலைகளைப் பற்றி ஊடகவியலாளனாக விவரமாக எழுதியிருக்கிறேன் அல்லது சில படுகொலைகளுக்குச் சாட்சியாகவும் இருந்திருக்கிறேன். இவை பற்றிய முழு விவரங்களையும் பட்டியலையும் தீர்ப்பாயத்திடம் வழங்கியிருக்கிறேன். இந்தக் கூட்டுப்படுகொலைகளில் 82 வயதுள்ள முதியவரிலிருந்து எடடு மாதக்குழந்தைகள்வரை அவர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காகப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பல சந்தர்ப்பங்களில் தமிழர்களைத் தனியாகப் பிரித்து அழைத்துச்சென்று இலங்கைப் படையினர் அவர்களைப் படு கொலை செய்துள்ளனர். இதத் கைய படுகொலைகள் பற்றிய எந்தத் தகவலும் இலங்கையின் சிங்கள, ஆங்கில மொழிப்பத்திரிகைகளில் வெளிவந்ததில்லை. அப்படி வெளியாகி இருந்தாலும், 'பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்' என்ற வழமையான இலங்கை அரசின் உத்தயோகபூர்வமான அறிக்கையே வெளியாகும். 1982 இலிருந்து இன்றுவரை இலங்கையின் ஊடக நிலைமை பெருமளவுக்கு இதுதான்.

இனப்படுகொலை தொடர்பாகச் சில புதிய பார்வைகளை ருவாண்டாவில் டூட்ஸி மக்களின் இனப்படுகொலை தொடர்பாக நியமிக்கப்பட்ட அனைத்துலகத் தீர்ப்பாயம்(International Criminal Tribunal for Rwanda–ICTR) எமக்கு வழங்கியிருக்கிறது. இநதத் தீர்ப்பாயம்; 1994ல் நிறுவப்பட்டது. பாலியல் வன்கொடுமைகளும் வன்புணர்வும் (RAPE)இனப்படுகொலைக் கருவிகள் எனவும் குறிப்பிட்ட சில சூழல்களில் அவை இனப் படுகொலைதான் எனவும் ICTR தீர்ப்பு வழங்கியுள்ளது. இது தொடர்பாக, இந்தத் தீர்ப்பாயத்தின் மதியுரைஞரும் சமூகவியலாளரும் அனைத்துலகச் சட்டத்துறையில் புலமையாளருமான போல் ஜே.மக்கெனரெலல் அவர்கள் எழுதியுள்ள பல சிறப்புக் கட்டு ரைகளை நான் தீர்ப்பாயத்திடம் சமர்ப்பிக்க விரும்புகிறேன். ஈழ இனப் படுகொலையிலும் பாலியல் வன்கொடுமைகளும் வன்புணர்வும் ஏராளமாக நிகழந்துள்ளன என்பதற்கான ஆதாரங்கள் இப்போது குவியத் துவங்கியுள்ளன. இவற்றுட் பல இந்தத் தீர்ப்பாயத்துக்கு வழங்கப்பட்டுள்ளன. நண்பர் கொலம் மக்ரேயின் ஆவணப் படங்களில் காட்டப்பட்ட சில காட்சிகள் இத்தகைய ஆதாரங்களின் ஒரு சிறுதுளி மட்டுமே என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். மொத்தத்தில் இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு நடந்துள்ளது இனப்படுகொலைதான் என்பது எனது வாதம்.

இலங்கையில் உண்மையான இனப்படுகொலை எனும்(Genocide) வடமாகாணத்தில் இஸ்லாமிய மக்களுக்கு நடந்ததே இதில் அடங்கும்.. அவர்கள் பாரம்பரியமாக வாழ்ந்த இடத்தில் இருந்து ஒரு இரவில் வெளியேறறப்பட்டார்கள். அவர்களது சொத்துக்களை விடுதலைப்புலிகள் சுவிகரித்தனர் என்பன மிகவும் பாரதூரமான செயல்கள்.

கடைசி யுத்தத்தில் அப்பாவிகள் கொல்லப்பட்டதற்கு பல காரணங்கள் . இது உலகமெங்கும் நடக்கிறது. இரண்டுபக்கமும் கொலைசெய்திருக்கிறார்கள். நான் அறிந்தவரையில் கால்வாசிப்பங்கினர் விடுதலைப்புலிகளால் கொலைசெய்யப்பட்டார்கள் அவைகளை நியாயமாக விவாதிக்கமுடியும்.

புலிகள் குளோரின் ஷெல்களைப்பாவித்தபோது இராணுவம் மாஸ்க் அணிந்து போரிட்டது . அதேபோல்பொஸ்பரஸ் இராணுவம் பாவித்தற்கும் சாட்சிகள் உண்டு.

முக்கியமான தவறு புலிகளின்மேல் .

யாழ்ப்பாணத்தில் 95 ல் மக்களை வெளியேற்றியதும் கிழக்குமாகாணத்தில் போர்க்களத்தில் இருந்து மக்கள் வெளியேற்றத்தை தடுக்காத புலிகள் மக்களை தங்கள் பாதுகாப்புக் கவசங்களாக கொண்டு சென்றதை அக்காலத்தில் கண்டித்தவர்களில் நான் ஒருவன். இப்படியான அப்பாவிகளின் மரணத்தை எதிர்பார்த்தேன் ஆனால் சேரன் போன்றவர்கள் பலர் வாய் திறக்கவில்லை. காரணம் மக்களின் கொலைகளால் விடுதலைப்புலிகள் காப்பாற்றபடலாம் என எண்ணியிருக்கலாம். http://noelnadesan.com/2012/11/27/let-my-people-go-in-peace/

தனிப்பட்ட ரீதியில் ஒருவரை அவமதிப்பது எனது பழக்கமல்ல. ஆனால் வரலாறுகள் திரிப்பதை பார்த்துக் கொண்டிருக்கும் பொறுமையில்லை. அதுவும் இவ்வளவு குறுகிய காலத்தில்.

கட்டுரையில் கூறிய விடயங்களை எதிர்க்கும் நேரத்தில் இந்த கட்டுரையில் நோக்கும்போது வார்த்தைகளின் இடையே உட்செருகல் என்பன முக்கியம்.

தற்போது வடகிழக்குத் தமிழர்கள் சரியோ தவறோ ஒரு தலைமையைத் தேர்ந்தெடுத்து புதிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அங்கீகாரம் அளித்துள்ளார்கள். இந்த நிலையில் சேரனின் இந்தக்கட்டுரை வெளிநாட்டில் உள்ளவர்களை தற்போதய நிலையில்முக்கியத்துப்படுத்தும்நோக்கம் கொண்டது. தற்போதய தமிழ்த்தலைமையை கேள்விக்குள்ளாக்கும் நோக்கம்கொண்டது. வெளிநாட்டவர்களின் முக்கியத்துவம் உள்ளுர் மக்களுக்கு கேடுவிளைவிக்கும் என்பதை யுத்தகாலத்தில் பார்த்தேன். யுத்தம் நடக்கும்போது விடுதலைப்புலிகள் தலைமை யுத்த நிறுத்தத்தை விரும்பியபோது நோர்வேயில் இருந்த சில தமிழர்கள் யுத்தத்தை தொடர்து சிலநாட்கள் நடத்த கூறியதான ஒலிப்பதிவை பசில் ராஜபக்ஸ, அவரைச் சந்தித்த எமது குழுவிற்கு காட்டினார். இதற்கு என்னைவிட பலர் சாட்சியமானார்கள்.

இலங்கை தமிழ் அரசியலை பற்றி எழுதுவதை குறைத்த நான் சேரன் மட்டுமல்ல மற்றய வெளிநாட்டு தமிழர்களின் பேச்சுக்கள் தற்போதய தமிழ் தலைமைகளை சங்கடப்படுததுவதும் அதற்கப்பால் கேடுவிளைவிக்கும் என்பதாலே இந்த கட்டுரையை எழுதினேன்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com