Saturday, August 30, 2014

ஒரு உயிரை பலியொடுத்த குரங்கும் குளவியும் - ( படங்கள்)

திம்புள்ள பத்தனை போகாவத்தை பகுதியில் காட்டுப் பகுதியில் வழிபாட்டுதளம் ஒன்றில் பூசைகளில் ஈடுப்பட்டு வீடுதிரும்பிக் கொண்டிருந்தவர்கள் மீது குளவி தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

29.08.2014 அன்று மாலைஇடம் பெற்ற இச்சம்பவத்தில் 4 ஆண்களும் 3 பெண்களும் அத்தோடு 4 சிறுவர்களும் குளவி கொட்டுக்கு இழக்காகி கொட்டகலை மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் அமைந்துள்ள மரத்தில் கட்டியிருந்த குளவி கூட்டை குரங்கு ஒன்று கலைத்ததன் காரணமாகவே இவ்வனர்த்தம் இடம்பெற்றதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

போகாவத்தைபகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 59 வயதான சிவபிரகாசம் என்பவரே சம்கவத்தில் உயிரிழந்துள்ளார் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ளபத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(க.கிஷாந்தன்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com