Saturday, August 30, 2014

தெற்கு அதிவேக வீதியில் விபத்து! காயமடைந்தோர் கராப்பிட்டிய வைத்தியசாலையில்!

இன்று பிற்பகல் 12.10 மணியளவில் தெற்கு அதிவேக வீதி யின் பின்னதுவ பிரதேசத்திற்கு அருகில் இடம்பெற்ற வீதி விபத்தில் 14 பேர் காயமடைந்துள்ளதுடன் காயமடைந்த 14 பேர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

கொட்டாவையிலிருந்து காலி நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டி, அனுமதி கட்டணத்தை செலுத்துவதற்காக நிறுத்தப்பட்ட போது, பின்னால் வந்த தனியார் பஸ் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பின்னதுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com