Friday, August 29, 2014

T N A தீர்மானத்தின்படி போனஸ் ஆசனம் சுழற்சி முறையில் வழங்கப்படுமா? ஆர்கே

1987 ம் ஆண்டு இந்திய அனுசரணையுடன் செய்யபட்ட உடன்பாடு காரணமாக எமக்கு கிடைக்கப்பட்ட ஓர் அலகு மாகாணசபையாகும். நீண்டகால இடைவெளியின் பின்னர் கடந்த வருடம் 2013 செப்ரம்பர் மாதம் வடமாகாணசபை தேர்தல் நடைபெற்றது.13வது திருத்தத்தில் போதிய அதிகாரம் இல்லை யென்று ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தெரிந்த விடயம் இவ்வாறு ஒருபுறமிருக்க மாகாணசபை மூலம் தமிழருக்கான தீர்வினை பெறமுடியும் என்றும் எமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கவேண்டும் அவ்வாறு கிடைக்கும் பட்சத்தில் வட மாகாணத்தில் பாரிய பல மாற்றங்களை எங்களால் கொண்டுவரமுடியும் என தேர்தல் காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரசாரங்களை மேற்கொண்டன.

2013 நடைபெற்ற வட மாகாண சபை தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான வாக்குகளை பெற்று அமோக வெற்றியீட்ட மக்கள் ஆணை வழங்கியிருந்தனர். ஆதிகூடிய ஆசனங்களை பெற்றதனால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இரண்டு போனஸ் ஆசனங்கள் கிடைத்தன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு போனஸ்சாக கிடைத்த இரண்டு ஆசனத்தில் அதில் ஒன்றை முஸ்லிம் பிரஜைக்கு வழங்கியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த அயூப் நஸ்மீன் என்பருக்கே அந்த போனஸ் ஆசனம் வழங்கப்பட்டது.

எஞ்சியுள்ள போனஸ் ஆசனத்தை சுழற்சி முறையில் ஐந்து வேட்பாளர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்து அதன்படி, ஐந்து வருட மாகாண சபை பதவி காலத்தில் ஐவர் தலா ஒவ்வொரு வருடம் மாகாண சபை உறுப்பினர்களாக பதவி வகிக்கவுள்ளனர்.

வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்களில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற ஐவருக்கு இந்த போனஸ் ஆசனம் பகிரப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துருந்தது.

வடமாகாண சபைக்குரிய போனஸ் இடங்களில் ஒன்றை பல்வேறுபட்ட சமூக நலன்களைக் கருத்தில் கொண்டு ஜந்து கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கும் ஒருவருக்கு ஒரு வருடம் வீதம் ஜந்து பேருக்கு சுழற்சி முறையில் வழங்குவது என்று கூட்டமைப்பு அதிகாரபூர்வமாக முடிவெடுத்திருந்தது.

அதன்படி, முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிட்ட மேரி கமலா குணசீலன் என்பவருக்கு முதலாவதாக அந்த இடத்தை வழங்க முடிவு செய்யப்பட்டதின்படி முதல் வருடத்தை மேரி கமலா குணசீலன் என்பவருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு வழங்கியிருந்தது.

இதன் பிரகாரம் முதலாவது ஆண்டு ஆசனம் தமிழர் விடுதலை கூட்டணிக்கும் இரண்டாவது ஆண்டு ஆசனம் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கும் (E P R L F) மூன்றாவது ஆண்டு ஆசனம் இலங்கை தமிழரசு கட்சிக்கும் நான்காவது ஆண்டு ஆசனம் தமிழ் ஈழ விடதலை இயக்திற்கும் (T E L O) இறுதியாண்டு ஆசனம் தமிழிழ மக்கள் விடுதலை கழகம் (P L O T E) என சுழற்சி முறை வழங்கப்பட்டிருந்தன. இவ்வாறு சுழற்சி முறை அடிப்படையில் போனஸ் ஆசனத்தை பகிர்வது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் தீர்மானிக்கப்பட்டது.

இவ்வாண்டு சுழற்சி முறை நடைமுறையில் வருவது சாத்தியபடுமா? ஆல்லது மக்கள் ஏமாற்றமடைந்தது போல் சுழற்சி முறையில் வரவேண்டிய ஏனைய நான்கு பேருக்கும் (M P நடராசா, S.சிவகரன், S.மயூரன் மற்றும் N.சிவநேசன்) ஏமாற்றமா? ஏன்ற கேள்விகளும் எழத்தான் செய்கின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாகாண அரசை பொறுப்பெடுத்து ஒருவருடங்கள் கழிகின்ற காலகட்டத்துக்குள் தேர்தல் காலங்களில் முன்மொழியப்பட்ட கோரிக்கைகள் மற்றும் அவர்களால் செய்யபடவேண்டிய வேலைத்திட்டங்கள் எல்லாம் கேள்விகுறியாகவே காணப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண அரசின் ஆக்கபூர்வமான செயர்பாடுகள் மிகவும் அரிதாகவே காணக்கூடியதாகவுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com