Wednesday, May 28, 2014

காதலர்களிடம் கப்பம் பெற்ற போலி பொலிஸ்......

இரகசிய பொலிஸ் பிரிவைச் சேர்ந்தவர் என கூறி காதலர்களை அச்சுறுத்தி கப்பம் பெற்று வந்த நபர் ஒருவரை கண்டி பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். கண்டி நகரின் மத்தியில் அமைந்துள்ள ஜோர்ஜ் ஆர்.டி.சில்வா பூங்காவிற்கு வரும் இளம் காதலர்களையே இவ்வாறு ஏமாற்றி அச்சுறுத்தி அந்நபர் கப்பம் பெற்றுள்ளார். கைது செய்யப்பட்ட இந்நபர் ஹோட்டல் ஒன்றின் ஊழியரெனவும் கடுகண்ணாவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் ஆரம்பக்கட்ட விசாரணை களிலிருந்து தெரிய வந்துள்ளது.

இச் சந்தேக நபர் தனிமையில் காணப்படும் இளம் காதலர்களை அணுகி தாம் இரகசிய பொலிஸ் பிரிவைச் சேர்ந்தவர் என தெரிவித்து அவர்களது தேசிய அடையாள அட்டையை பரிசோதிப்பது போன்று பாசாங்கு செய்து அவர்களை அச்சுறுத்தி கப்பம் கோரி வந்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com