Thursday, May 8, 2014

சமூக வலைத்தளங்களை நிறுத்தினால் எனது வீட்டிலேயே புரட்சி வெடிக்கும். மஹிந்தர்.

இன்று டுவிட்டர் ஊடாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மக்களுக்கு பதிலளித்தார். அப்போது எதிர்காலத்தில் சமூக வலைத்தளங்களை தடை செய்யும் நோக்கம் உண்டா என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் 'அவ்வாறு நான் சமூக வலைத்தளங்களை தடை செய்வேனாக இருந்தால் எனது வீட்டில் புத்திரர்களிடமிருந்து புரட்சி வெடிக்கும்' என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் தனது தனிப்பட்ட முகப்புத்தகப்பக்கத்தில் 300000 விருப்புக்களும் டுவிட்டர் பக்கத்தில் 25000 விருப்புக்களும் பதிவாகியிருக்கின்றபோது அவற்றை நான் எதற்காக தடை செய்யவேண்டும் என்றும் வினவியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com