Thursday, May 8, 2014

புகையிலை தூள் அடைக்கப்பட்ட 300 டின்களுடன் மூவா் அட்டன் பொலிஸாரால் கைது!

புகையிலை தூள் அடைக்கப்பட்ட 300 டின்களை கொழும்பிலிருந்து பொகவந்தலாவை பிரதேசத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்ய முயற்சித்த மூவரையும் முச்சக்கரவண்டியையும் 08.05.2014 அன்று அட்டன் பொலிஸாா் கைது செய்துள்ளனா்.

பொகவந்தலாவ பிரதேசத்தில் மாணவா்கள் வழங்கிய தகவலின்படி விரைந்து சென்ற அட்டன் பொலிஸாா் குறித்த மூன்று சந்தேக நபா்களையும் விசாரணைக்குட்படுத்தியபோது புகையிலை தூள் அடைக்கப்பட்ட 300 டின்கள் இருந்தது தெரியவந்துள்ளது.

இது மாணவா்களுக்கு அதிகளவாக விற்பனை செய்யப்படுகின்றது என ஆரம்பகட்ட விசாரணையின்போது தெரியவந்துள்ளது.

இது தடை செய்யப்பட்ட போதைபொருள் என்பது குறிப்பிடதக்கது.

கைது செய்த மூன்று நபா்களையும் முச்சக்கரவண்டியையும் 09.05.2014 அன்று அட்டன் நீதிமன்றத்தில் ஆஜா்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அட்டன் பொலிஸாா் தெரிவித்தனா்.

க.கிஷாந்தன்







0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com