Friday, May 9, 2014

ரயில் சாரதியுடன் பயணித்த மனைவிக்கு அபராதம்.....தேசத்துக்கு மகுடம் ரயிலில் சம்பவம் !!

புகையிரதத்தின் என்ஜின் பெட்டியில் ரயிலின் சாரதியும் உதவியாளரும் மாத்திரமே பயணிக்க முடியும். இருப்பினும், சம்பவதினம், ரயில் சாரதியின் மனைவியும் அதில் பயணித்துள்ளார். இதனை ரயில் சாரதி படம்பிடித்தும் உள்ளார். கொழும்பு, கோட்டையிலிருந்து பளை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த தேசத்துக்கு மகுடம் ரயிலின் என்ஜின் பெட்டியில் பயணித்த ரயில் சாரதியின் மனைவிக்கு 4 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் ரயில்வே திணைக்களத்திடம் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, மேற்படி ரயிலை சோதனையிட்ட போக்குவரத்து அதிகாரசபை அதிகாரிகள், குறித்த ரயில் சாரதியின் மனைவியை பிடித்து, தண்டம் விதித்துள்ளனர். இந்நிலையில், குறித்த ரயிலின் என்ஜினில் பெண்ணொருவர் பயணிப்பதை அவதானித்துள்ள பயணிகள் சிலர், ரயில்வே திணைக்களத்திடம் முறையிட்டுள்ளனர்.

இதனையடுத்து உடன் நடவடிக்கை எடுத்துள்ள அதிகாரிகள், குறித்த புகையிரதத்தை பொத்துஹெர ரயில் நிலையத்தில் வைத்து சோதனையிட்ட போது, ரயில் சாரதியின் மனைவி கைதாகி தண்டப்பணம் செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com