Saturday, March 22, 2014

விதி முறை­மை­களை மீறியுள்ள பிரே­ர­ணையை தோற்கடிக்க முஸ்லிம் நாடுகள் ஆத­ரவு வழங்­க­வேண்டும்!

ஐ. நா மனித உரிமைப் பேர­வையில் இலங்­கைக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்­டுள்ள பிரே­ர­ணை­யா­னது மனித உரிமைப் பேர­வையின் விதி முறை­மை­களை மீறு­வ­தாகவும் ஐ. நா மனித உரிமைப் பேர­வையின் விசா­ரணை என்ற பெயரில் இலங்கை மீது சர்­வ­தேச விசா­ர­ணையை மேற்­கொள்ளும் முயற்­சி­களை தோற்­க­டிக்க இலங்­கைக்கு முஸ்லிம் நாடுகள் ஆத­ரவு வழங்­க­வேண்டும் என்று பெருந்­தோட்டக் கைத்­தொழில்துறை அமை­ச்சரும் ஜெனிவா தூதுக்­கு­ழு­வின்உ றுப்­பி­ன­ரு­மான மஹிந்த சம­ர­சிங்க தெரி­வித்­துள்ளார்.

ஐ. நா மனித உரிமைப் பேர­வையில் முன்­வைக்­கப்­பட்­டுள்ள இலங்கை குறித்த பிரே­ர­ணை­யா­னது நல்­லி­ணக்­கத்­துக்கு அச்­சு­றுத்­த­லாகும் என்றும் அமைச்சர் சம­ர­சிங்க ஜெனி­வாவில் நடத்­திய உப­குழுக் கூட்டம் ஒன்றில் குறிப்­பிட்­டுள்ளார்.

ஜெனிவா மனித உரிமைப் பேர­வையை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் உலக இஸ்­லா­மிய ஒத்­து­ழைப்பு அமைப்பு நாடு­களின் பிர­தி­நி­தி­களை கடந்த வியா­ழக்­கி­ழமை ஜெனி­வாவில் சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­ய­போதே அமைச்சர் சம­ர­சிங்க மேற்­கண்ட விட­யங்­களை குறிப்­பிட்­டுள்ளார்.

இந்த சந்­திப்­புக்­க­ளின்­போது யுத்­தத்­துக்குப் பின்­ன­ரான நாட்டில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­தவும் சமா­தா­னத்தை கட்­டி­யெ­ழுப்­பவும் மேற்­கொள்­ளப்­பட்­டு­வரும் வேலைத்­திட்­டங்கள் தொடர்­பாக அமைச்சர் சம­ர­சிங்க விளக்­க­ம­ளித்­துள்ளார்.

அமைச்சர் இந்த சந்­திப்­பின்­போது மேலும் தெரி­விக்­கையில், எமது நாட்டில் மத உரிமை மற்றும் கருத்து உரிமை போன்­றவை தொடர்பில் அர­சி­ய­ல­மைப்பில் உறு­தி­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இலங்கை பல் மத மற்றும் பல மொழிகள்இ கலா­சா­ரத்தை நீண்­ட­கா­ல­மாக கொண்ட நாடாகும்.

ஜெனிவா மனித உரிமைப் பேர­வையில் இலங்­கைக்கு எதி­ராக கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள பிரே­ர­ணையில் மத விவ­காரம் குறித்து தேவை­யற்ற முறையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இது உள்­நாட்டில் முன்­னெ­டுக்­கப்­படும் நல்­லி­ணக்க வேலைத்­திட்­டங்­களை குறைத்து மதிப்­பி­டு­வ­தாக உள்­ள­துடன் அர­சி­யல்­ம­ய­மா­ன­தாக காணப்­ப­டு­கின்­றது. இதன் மூலம் அர­சியல் நோக்­கமே அடை­யப்­பட முயற்­சிக்­கப்­ப­டு­கின்­றது என்றார்.

இதே­வேளை முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராக புலிகள் பாரிய மூர்க்­கத்­த­ன­மான தாக்­கு­தல்­களை முன்னர் மேற்­கொண்­ட­தா­கவும் வடக்­கி­லி­ருந்து முஸ்லிம் சிங்­கள மக்­களை வெளி­யேற்­றி­ய­தா­கவும் அமைச்சர் இந்த சந்­திப்­புக்­க­ளின்­போது தெளி­வு­ப­டுத்­தி­யுள்ளார். முன்னர் மேற்­கொள்­ளப்­பட்ட இவ்­வா­றான செயற்­பா­டுகள் தற்­போது நல்­லி­ணக்­கத்தின் மூலம் சரி செய்­யப்­பட்­டு­வ­ரு­கின்­றது எனவும் முஸ்லிம் நாடு­களின் பிர­தி­நி­தி­க­ளு­ட­னான சந்­திப்­புக்­க­ளின்­போது அமைச்சர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com