Saturday, March 22, 2014

ஓரினச் சேர்க்கையாளர்களால் நாட்டின் அபிவிருத்திக்கு எவ்வித பாதிப்பும் இல்லை! - டயனா கமகே

ஓரினச் சேர்க்கையாளர்களால் நாட்டின் அபிவிருத்திக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை வேட்பாளர் டயனா கமகே குறிப்பிடுகிறார்.

ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் கருத்துக்கும் போது தெரிவித்ததாவது -

“ஒவ்வொருவரும் பிறக்கும்போது அவர் எடுத்துவருவதற்கேற்பவே அனைத்தும் விதிப்படி நிகழ்கின்றது என பௌத்த சமயம் குறிப்பிடுகின்றது. ஓரினச் சேர்க்கையாளர்களும் விதிப்படிதான் அதில் ஈடுபடுகிறார்கள் என நான் நினைக்கிறேன். அதனால் எங்கள் யாரும் அதற்கெதிராக குரல் கொடுக்க முடியாது. அது அவரவர்களின் உரிமை. நாட்டின் சனத்தொகையில் நூற்றுக்கு ஒன்று, இரண்டு பேர் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுகிறார்கள் என்பதனால் ஒருபோதும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கீழ்மட்டத்தை அடைவதில்லையே… அதனால் அவர்களது உரிமைகளை அவர்களுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதற்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன்…”

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com