சிங்களப் புலிப்பினாமிகளும் ஊடகவியலாளர்களாக ஜெனீவா மாநாட்டில்...!
இலங்கையிலிருந்து திருட்டுத் தனமாகச் சென்று வெளிநாடுகளிலிருந்து கொண்டு, பிரிவினைவாத சிந்தனைகளை விதைத்து வருகின்ற, தங்களை ஊடகவியலாளர்கள் எனச் சொல்லிக் கொள்கின்ற பகுதியினருக்கு வெளிநாட்டு புலிப் பினாமிகள் அடையாள அட்டைகள் வழங்கியுள்ளனர்.
சிங்கள ஊடகவியலாளர்கள் உட்பட 50 இற்கும் மேற்பட்டோருக்கு அவ்வடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாக அறியவருவதுடன், புலிப் பயங்கரவாதிகளின் சர்வதேச வலைப்பின்னலில் இருக்கின்ற முக்கிய தலைவர்களின் கையொப்பமும் இடப்பட்டுள்ளது.
இந்த அடையாள அட்டையைப் பயன்படுத்தி, இம்முறை இடம்பெற்ற ஜெனீவா மாநாட்டிலும் ஊடகவியலாளர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.
புலிப் பினாமித் தலைவர்களின் பல்வேறு கூட்டங்களுக்கும், கருத்தரங்குகளுக்கும் இவ்வடையாள அட்டை பயன்படுத்தப்படுவதுடன், புலிப் பயங்கரவாத தலைவர்களைச் சந்திப்பதற்கு இவர்களுக்கு எவ்வித இடைஞ்சலும் இல்லை எனவும் கூறப்படுகின்றது.
(கேஎப்)
0 comments :
Post a Comment