மேல் மற்றும் தென் மாகாண சபை தேர்தல் கடமையில் 25 ஆயிரம் பொலிஸார் – அஜித் ரோஹன!
மேல் மற்றும் தென் மாகாண சபை தேர்தலில் மொத்தம் 4266 வாக்களிப்பு நிலையங்களுக்கும் ஆயுதம் தரித்த இரு பொலிஸார் வீதமும், பெண்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வீதமும் நியமிக்கப்பட பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
தேர்தல்கள் செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அது மட்டும்லாது தேர்தல் நடைபெறும் பிரதேசங்களில் 904 ரோந்து பொலிஸ் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு தேர்தல் பாதுகாப்புக் கடமைகளுக்கென மாத்திரம் 25 ஆயிரத்து 35 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment