Monday, March 17, 2014

பயணச் சீட்டு இல்லாமல் புகையிரதத்தில் சென்றவருக்கு தண்டப் பணத்திற்கு பணமில்லை!

கோட்டை நீதிபதி வழக்கும் விசாரித்து தண்டப் பணமும் கட்டினார் பாருங்கள்…!

நீதிபதியால் தண்டப் பணம் விதிக்கப்பட்டு, அந்தத் தண்டப் பணத்தையும் தானே செலுத்திய நிகழ்வு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றுள்ளது.

பயணச் சீட்டின்றி புகையிரதத்தில் பயணம் செய்த நபரொருவரை புகையிரத பாதுகாப்பு அதிகாரிகள் கைதுசெய்து, கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து நீதவான் நீதிமன்ற நீதவானும் மாவட்ட நீதவானுமாகிய திலின கமகே இரண்டாயிரம் ரூபா தண்டப் பணம் செலுத்துமாறு குறித்த சந்தேக நபருக்கு ஆணையிட்டுள்ளார்.

பதுளை, தல்தெனவில் வசிக்கும் முதியன்சலாகே பிரேமரத்ன எனும் சந்தேக நபருக்கே இந்த தண்டப் பணம் விதிக்கப்பட்டது.

தண்டப் பணம் செலுத்துவதற்கு தன்னிடம் போதிய பணவசதியில்லை என சந்தேக நபர் குறிப்பிட்டதைத் தொடர்ந்து, நீதிபதி நீதிமன்றத்திற்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரியிடம் ரூபா 2000 கொடுத்து தண்டப் பணத்தைச் செலுத்துமாறு ஆணையிட்டுள்ளார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com