Saturday, March 22, 2014

கடன் அட்டை மோசடியில் ஈடுபட்ட 3 இலங்கைத் தமிழர்கள் சென்னையில் கைது!

சென்னையில் கடன் அட்டை மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில் சென்னை இராமாவரம் பகுதியில் இருந்த இலங்கைப் பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கு அமைய இன்டர்போலினால் தேடப்பட்டு வந்த ஒரவர் உட்பட மூன்று இலங்கைத் தமிழர்களை சென்னைப் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலையைச் சேர்ந்த ஜெயதரன் தம்பாப்பிள்ளை (வயது 28) மற்றும் வி.நவநீதராஜா (வயது 37), வி.பிரதீப்குமார் (வயது 28) ஆகியோரே கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

மோசடிக் கடன் அட்டைகளைப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் பிரேம் என்று அழைக்கப்படும் சிவனேசன் என்பவரை மத்திய குற்றப் பிரிவு பொலிஸார் சில தினங்களுக்கு முன்னர் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் அவர் கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே மேற்படி மூவரையும் கைதுசெய்துள்ளதுடன் அவர்கள் வசமிருந்த மோசடிக் கடன் அட்டைகளைத் தயாரிப்பதற்கான உபகரணங்களுடன் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதே வேளை கடன் அட்டை மோசடிக்காக ஜெயதரன் தம்பாப்பிள்ளையை கைது செய்வதற்கான சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பை ‘இன்டர்போல்’ எனப்படும் சர்வதேசப் பொலிஸ் மூலம் இலங்கைப் பொலிஸார் 2011 இல் விடுத்திருந்தனர் என்று கூறப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com