சிறுவர் போராளிகளை இணைக்க ஒத்துழைப்பாகவிருந்த அனந்தி இன்று மனித உரிமை பற்றி பேசுகிறார் – டக்ளஸ்!
இலங்கையின் உண்மையான நிலைமைக்குப் புறம்பான தகவல்களை முன்னாள் புலிகளின் உறுப்பினர் எழிலனின் மனைவியான அனந்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கூறியிருப்பதாக, பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவைக்கு விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பாக தெரியவருவதாவது புலிகளின் சிறுவர் போராளிகளை இணைப்பதற்கு ஒத்துழைப்பாகவிருந்த அனந்தி, ஜெனீவா சென்று இலங்கையின் உண்மை நிலைக்குப் புறம்பான தகவல்களையும், வடமாகாணம் தொடர்பான பொய்யான தகவல்களையும் வழங்கியிருப்பதுடன் இலங்கை அரசாங்கம் மீது அவர் போலியான குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்துள்ளார்.
மேலும் குறித்த போலியான குற்றச்சாட்டுகள் அனைத்தம் இரண்டு சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட நேரத்திலேயே அவர் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கியிருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவைக்குக் கூறியுள்ளார்.
அனந்தியின் கருத்தானது அரசாங்கம் மீதுள்ள நன்பெயரைக் பாதிக்கும் வகையில் அமைந்திருப்பதுடன், சர்வதேச சமூகத்திடம் அனுதாபம் பெறும் வகையில் அமைந்திருந்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அமைச்சரவையிலிருந்த அமைச்சர்கள் தமது அதிருப்தியை வெளியிட்டதுடன், இலங்கையின் உண்மை நிலைமைக்குப் புறம்பாக முன்னெடுக்கப்படும் பிரசாரங்களை முறியடித்து உண்மை நிலைமையை தூதரகங்கள் ஊடாக விளக்குவதற்கு வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment