பிள்ளையையும் கிள்ளி, தொட்டிலும் ஆட்டும் ஈபிடிபி யின் சூரிச் வித்துவான்!!
ஈபிடிபியின் சுவிஸ் பொறுப்பாளர் திலக் தாயகத்தில் தங்கி நிற்பது குறித்து சில இணையங்கள் தமது காழ்புணர்ச்சி அல்லது அதிருப்தியை வெளியிட்டிருந்தது. அடிப்படை ஆதாரங்கள் எதுவும் இல்லாது வெளியிடப்பட்ட செய்தியின் பின்னணியில் ஈபிடிபி யின் சூரிச் முக்கியஸ்தர் ஒருவர் இருப்பதாக நம்பத்தகுதந்த வட்டாரங்களிலிருந்து அறியக் கிடைக்கின்றது.
திலக் ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியை (ஈ.பி.ஆர்.எல்.எப்) சேர்ந்தவர். ஆரம்ப காலத்தில் அவ்வியக்கத்துக்காக தனது பூணர பங்களிப்பை வழங்கி இருக்கின்றார். பின்னர் டக்ளஸ் தலைமையிலான ஈபிடிபியில் இணைந்து கொண்டார். இவர் ஈ.பி.டி.பி சுவிஸ் பொறுப்பாளராக இருக்கின்றார். இவரது பதவியை கைப்பற்றுவதற்காக சுவிஸ்சிலுள்ள பிறிதொரு நபர் நீண்ட நாட்களாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். இது தலைமையால் இன்றும் தீர்த்து வைக்கப்படாத ஒரு பிரச்சனையாகவே இருந்து வருகின்றது.
இந்நிலையில் இலங்கையில் திலக் நின்று பணிகளை மேற்கொள்வதை சகித்துக் கொள்ள முடியாத நபர் மேற்படி இணையங்களுக்கு தவறான தகவல்களை மூன்றாம், நான்காம் தரப்புகளுடாக வழங்கி, திலக் மீது காழ்புணர்ச்சி தீர்த்துள்ளதாக அறிய முடிகின்றது.
இதில் முக்கியமான விடயம் யாதெனில் இணையங்களுக்கு செய்தியை மூன்றாம், நான்காம் தரப்பூடாக வழங்கிய நபர், செய்தி வெளியான பின்னர் ஒன்றுமே தெரியாதவர் போல் குறித்த இணையத்தின் ஆசிரியரை தொடர்பு கொண்டு “திலக் இலங்கை பிரஜா உரிமையையே வைத்திருக்கின்றார். நீங்கள் தவறான செய்தியை வெளியிட்டிருக்கின்றீர்கள்” என பிள்ளையையும் கிள்ளி, தொட்டிலும் ஆட்டும் செயற்பாட்டை செய்ய முற்பட்ட போது, குறித்த இணைய ஆசிரியரிடமிருந்து செந்தமிழில் வாங்கிக் கட்டியதாகவும் அறியக் கிடைக்கின்றது.
மேற்படி தகவல் குறித்த நபராலேயே வழங்கப்பட்டது என்ற சந்தேகங்கள் திலக்கின் ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்த போதே இவர் “அவ்வாறில்லை நான் அவர்களிடம் இது தொடர்பில் சமரிட்டேன்” என்று சொல்வதற்காகவே இவர் குறித்த இணைய ஆசிரியரை தொடர்பு கொண்டாரா? என்ற கேள்வியும் எழுகின்றது.
எது எவ்வாறாயினும் பதவிப்போட்டிகளால் இயக்கங்களுள் இடம்பெற்ற உள்வீட்டு கொலைகள் மற்றும் காட்டிக்கொடுப்புக்களின் வடுக்கள் நிறைந்திருக்கின்ற இந்த சமூகத்தில் ஊடகங்கள் தொடர்ந்து இவ்வாறான இழிசெயல்களுக்கு துணை போகாமல் இருக்கவேண்டும்.
0 comments :
Post a Comment