கொலன்னாவ தேரருக்கு அரசியல்வாதியொருவரால் அச்சுறுத்தல்!
போதைப் பொருளுடன் தொடர்புடைய அரசியல்வாதியொருவர் பற்றி ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தமை தொடர்பில், கொலன்னாவ சிட்டினாமலுவே ஸ்ரீ ஆனந்தாரமவின் வஜிரஸ்ரீ தேரருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. கொலன்னாவைப் பிரதேசத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் அடிவருடி ஒருவரினாலேயே இவ்வாறு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
இம்மரண அச்சுறுத்தல் தவிரவும், கொலன்னாவ - சாலமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள குறித்த தேரரின் விகாரைக்கு முன்பாக நல்லிரவு 12 மணிக்கும் அதிகாலை 2 மணிக்குமிடையில் வெள்ளை வானொன்று சுற்றிச் சுற்றி வருவதாகவும் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் குறிப்பிடுகின்றனர்.
குறித்த வெள்ளை வான் இவ்வாறு சுற்றிவருவதைக் கண்ணுற்ற பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் அதுதொடர்பில் வினவியபோது, தங்களிடமிருந்து ஆயதங்களை அவர்கள் காட்டியு அச்சுறுத்தியுள்ளனர்.
மேலும், சென்ற வாரம் குறித்த விகாரைக்குள் மறைந்திருந்த இனந்தெரியாத ஒருவர் தொடர்பிலான தகவல்கள் தெரியவந்துள்ளது.
(கேஎப்)
0 comments :
Post a Comment