புலிப் பினாமிகள் ஒபாமைவும் அண்மிக்கிறது..! - லலித் வீரதுங்க
இலங்கைக்கு எதிராக போர்க்குற்றச் சாட்டுக்களைச் சுமந்து, புலம்பெயர் புலிப் பயங்கரவாதிகள் அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவின் நட்பினைப் பெறுவதற்காக அவரிடம் பல விடயங்களைச் சொல்லியுள்ளனர்.
ஒபாமாவின் நண்பரொருவர் முன்னெடுத்துச் செல்லும் பிரச்சார நிறுவனமொன்றின்றின் உதவியை பல மில்லியன் டொலர்கள் செலுத்தி புலம்பெயர் விடுதலைப் புலி ஆதாரவாளர்கள் பெற்றுள்ளதாக அரசாங்கத்திற்கு தெரிய வந்துள்ளது.
அமெரிக்க காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களை சந்திப்பதற்காக, ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க சென்ற வேளையிலேயே இவ்விடயங்கள் பற்றித் தெரியவந்துள்ளது.
வெள்ளை மாளிகையில் செயற்படுகின்ற இந்த பிரச்சார நிறுவனம் புலிப் பினாமிகளுக்காக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவிடம் இலங்கைக்கெதிரான தகவல்களை வழங்குகின்றது.
ஜனாதிபதி செயலாளர் அமெரிக்காவிற்குச் செல்லும்வரை இப்பிரச்சார நிறுவனத்தின் உதவி புலிப்பினாமிகளுக்கு கிடைத்த வண்ணமிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் புலம் பெயர் புலி ஆதரவாளர்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களில் ஒவ்வொருவருக்கும் 50 இற்கும் மேற்பட்ட மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளனர் எனவும் தெரியவருகின்றது.
(கேஎப்)
0 comments :
Post a Comment