Wednesday, October 9, 2013

பணிப்பெண்களுக்கு சித்திரவதை கொடுப்பதற்கு பெயர் பெற்ற நாடு சவுதி! நான்கு பிள்ளைகளின் தாயின் ஆதங்கம்!

சவுதி அரேபியாவிற்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்று அங்கு பல சித்திரவதைகளுக்கு இலங்கை பணிப்பெணகள் முகங்கொடுத்து வருவது சாதாரணமாகிவிட்ட நிலையில் பலாங்கொட வேவல்வத்த பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயான பாப்பாத்தி என்பவர் 2012ம் ஆண்டு சவுதிக்கு சென்று சித்திரவதை களுக்கு உள்ளான நிலையில் நாடு திரும்பி பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் குறித்த பெண் கருத்து தெரிவிக்கையில் தான் தொழிலுக்கு சென்ற நாள் தொடக்கம் வீட்டு உரிமையாளரான பெண் தன்னை சித்திரவதை செய்த தாகவும், இரண்டு வருடங்கள் துன்புறுத்தப்பட்ட தான் ஒருநாள் மயக்கமடைந்ததாகவும், அப்போது வீட்டு உரிமையாளரான பெண் தன்னை வீதியில் போட்டுச் சென்றதாகவும், அதன்பின் சவுதியில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் தன்னை நாட்டுக்கு திருப்பி அனுப்பியதாக அவர் கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com