Wednesday, October 9, 2013

இது ஒரு நல்லெண்ண அடையாளம் மட்டுமே - சம்பந்தன்.

இலங்கையில் மத்திய அரசுடன் மோதி மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளை நிறைவேற்றுவது கடினமாக இருக்கும். மாகாண சபை தற்போதுதான் பிறந்த ஒரு குழந்தை. அது வளர வேண்டும். மாகாண சபையை நடாத்துவதற்கு ஓர் அலுவலகக் கட்டிடம் கூட இல்லை. இந்த உண்மை நிலையை உணர வேண்டும் என்று தமிழ்த தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறியுள்ளார்.

இந்த நல்லெண்ண அடையாளத்தை சிங்கள அரசியல் தலைவர்கள் ஏற்று தமிழர்களுக்கு சரியான தீரவைத் தராவிட்டால், அதன் விளைவுகளுக்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஜனாதிபதின் முன்னால் முதலமைச்சர் சத்தியப் பிரமாணம் செய்து கொள்வது பற்றி கூட்டமைப்புக்குள் நிலவிய கருத்து வேறுபாடுகள் பற்றிக் கூறிய சம்பந்தன் இதில் உள்ளார்த்தம் ஒன்றுமில்லை யார் முன் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டாலும் இதே வாக்கியங்களைத்தான் கூறுவார்கள். இது ஒரு நல்லெண்ண அடையாளம் தவிர வேறில்லை என்று கூறியுள்ளர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com