Wednesday, October 9, 2013

காதல் தோல்வியால் 20 வயது இளைஞன் ரயிலில் பாய்ந்து தற்கொலை! மட்டக்களப்பில் சம்பவம்!

மட்டக்களப்பு மாமாங்கத்தைச் சேர்ந்த 20 வயதான விஜி சிரான் என்ற இளைஞன் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இச்சம்பவம் மட்டக்களப்பில் இன்று அதிகாலை இடம் பெற்றுள்ளது. காதல் தோல்வியால் குறித்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com