மனைவியின் தங்கையுடன் குடும்பத்தர் நஞ்சருந்தி தற்கொலை கள்ளக் தொடர்பு என பொலிஸார் சந்தேகம்? -படங்கள் இணைப்பு
மனைவியின் தங்கையுடன் குடும்பத்தர் ஒருவர் நஞ்சருந்தி தற்கொலை செய்துள்ள சம்பவம் ஒன்றுநுவரெலியா மாவட்டம் கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கரோலினா தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இதில் குடும்பத்தரான முணுசாமி மாடசாமி (30) எனவும் அவரது மனைவியின் தங்கையான செல்வராஜா ராசமலர் (24) ஆகியோரே உயிரிழந்தவர்களாவார்கள்.
குறித்த பகுதியில் இருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவரும் யுவதியொருவரும் இன்று வெள்ளிக்கிழமை காலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
கரோலினா தோட்டத்திலுள்ள மலையொன்றின் உச்சிக்கு சென்ற இவர்கள் இருவரும் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இருவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்திருப்பதாகவும் அதன் காரணமாகவே நஞ்சருந்தி தற்கொலை செய்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 comments :
Post a Comment