Friday, February 22, 2013

ஜோர்தானில் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கையர் எண்மர் கைது!

ஜோர்தான் தொழிற் பணியிடங்களில் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் செய்ய முடியாது என்பதை அறிந்தும், அந்நாட்டின் ‘யுனைட்டட் கிரியேஷன்ஸ்’ ஆடைத் தொழிற்சாலையில் பணியாளர்களை இணைத்துக்கொண்டு வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடாத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு இலங்கையர் எட்டுப்பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகஇலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.

ஆடைத் தொழிற்சாலையில் ஆடைகளைத் திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு பணியாளர்ளை விசாரிக்குமாறு பாதுகாப்புப் பிரிவினருக்கு உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதைத் தொடர்ந்து, அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்குமுகமாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது என பணியகத்தின் தலைவர் அமல் சேனாலங்காதீர குறிப்பிடுகிறார்.

நேற்று முன்தினம் இவ்வாறு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ஆர்ப்பாட்டம் நடைபெறும் வேளை உரிமையாளர்கள் பொலிஸாரை அங்கு வரவழைத்துள்ளனர். பிரச்சினைகள் முற்றியதால் அங்கு கைகலப்பு இடம்பெற்று பணியாளர்கள் பலர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தலைவர் குறிப்பிட்டார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com