Wednesday, November 7, 2012

ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளாகிய ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் பதவி பறிப்பு

ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சரான அனடோலி, பாதுகாப்பு அமைச்சகத்துக்கு சொந்தமான நிறுவனத்தில் ரூ.540 கோடி மதிப்புள்ள சொத்தில் ஊழல் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.இதனையடுத்து அவரிடம் விசாரணை நடத்துவதற்கு ஏதுவாக, அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என ஜனாதிபதி மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சர் பணிநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து மாஸ்கோ கவர்னரும், தனது நெருங்கிய நண்பருமான செர்கெய் ஷோய்குவை புதிய பாதுகாப்பு அமைச்சராக நியமித்துள்ளதாக கிரெம்ளின் மாளிகை செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதிக்கு எதிராக உள்நாட்டு கிளர்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு அமைச்சர் நீக்கப்பட்டுள்ளது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com