Wednesday, November 7, 2012

சண்டேலீடர் பத்திகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் பெற்றிக்காவுக்கு பிடியாணை

சண்டேலீடர் பத்திகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் பெற்றிக்கா ஜான்ஸ்க்கு நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபாலவின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்து செய்திகளை பிரசுரித்தார் என்ற குற்றச்சாட்டில் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்க்காக மேன்முறையீட்டு நீதியரசர் எடுத்துக்கொண்டார்.

இதன்போது சண்டேலீடர் பத்திரிக்கையின் ஆசிரியரான பெற்றிக்கா ஜான்ஸ் நீதிமன்றில் ஆஜராகாததை அடுத்தே மேன்முறையீட்டு நீதியரசர் பிடியாணை பிறப்பித்து வழக்கை 25 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

இதேவேளை வெளிநாடு ஒன்றில் சண்டேலீடர் பத்திகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் பெற்றிக்கா தஞ்சம் அடைந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com